Header Ads



வெள்ளம் வழிந்தோடிய பின், பார்வையிடம் செல்லும் எதிர்க்கட்­சி..!

தென்­னி­லங்­கையில் அனர்த்தம் இடம்­பெற்ற பகுதிகளுக்கு இன்­றைய தினம் எதிர்க் கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் நேரடியாக சென்று பார்­வை­யி­ட­வுள்ளார்.

அண்­மைக்­கா­ல­மாக நீடித்த தொடர் மழை யால் ஏற்­பட்ட வெள்ளம், மண்­ச­ரிவு கார­ண­மாக  208 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்­னி­லங்­கையின் காலி, மாத்­தறை மாவட்­டங்­களும், இரத்­தி­ன­புரி, களுத்­துறை மாவட்­டங்­களும் இந்த அனர்த்­தத்தின் கார­ண­மாக முழு­மை­யாக  சீர்கு­லைந்­துள்­ளன.

மழை­யுடன் கூடிய வானிலை தொடர்­கின்ற நிலையில் அனர்த்­தினால் ஏற்­பட்ட பகு­தி­களை நேரில் சென்று பார்­வையிடுவதற்காக எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் இன்­றைய தினம் மாத்­தறை, களுத்­துறை, இரத்­தி­ன­புரி மாவட்­டங்­க­ளுக்கு செல்­ல­வுள்ளார்.

இதன்­போது இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை.சோ.சேனா­தி­ராஜா எம்.பி, கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் எம்.பி உள்ளிட்ட மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

3 comments:

  1. இவர்கள் சுயநலவாதிகள், பிரிவினைவாதிகள் இவர்களால் இந்த நாட்டிற்கு ஏதாவது நல்லது நிகழ்ந்ததுண்டா?

    ReplyDelete
    Replies
    1. @IK MS,
      முஸ்லிம் தலைவர்களை போல பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது மாதிரி நாடகம் நடித்து, அதை photo எடுத்து media க்கு கொடுக்கசொல்கிறீர்களா?

      ஆனால், எப்படிதான் முஸலிம் தலைவர்கள் சிவாஜி மாதிரி ஓவர்-acting செய்தாலும் பௌத்தர்கள் மன்னிக்கிறார்கள் இல்லையே?

      Delete
  2. Unga muslinal mattum nalathu nadanthu iruka??
    muditi velya paru

    ReplyDelete

Powered by Blogger.