Header Ads



தோல்வி குறித்து கடுகடுக்கும், ஏஞ்செலோ மேத்யூஸ்

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்களோ அவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவர் என்ற சூழ்நிலை நிலவியதால் இரு நாட்டு ரசிகர்களுக்கிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

இதையடுத்து, இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை, 236 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் 237 என்ற இலக்கை பாகிஸ்தான் தட்டுத்தடுமாறி கடந்தது. இலங்கையின் இந்தத் தோல்விக்கு முக்கிய காரணமாக பலரால் சொல்லப்பட்டது, அவர்களின் ஃபீல்டிங்தான். கிட்டத்தட்ட மூன்று சுலபமான கேட்சுகளை விட்டு, பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விளையாட வழிகோலியதே கடைசியில் இலங்கை அணியின் தோல்விக்கு வித்திட்டது.

இந்த சூழ்நிலையில்தான் இலங்கை அணியின் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், 'இன்று நடந்த போட்டியை திரும்பிப் பார்க்கும்போது, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்பது தெரிகிறது. அதுவும் எங்கள் ஃபீல்டிங் மிகவும் மட்டமானதாக இருந்தது. நாங்கள் மட்டும் எங்களுக்கு வந்த கேட்சுகளைப் பிடித்திருந்தால், இன்று வேறொரு கதையைப் பற்றி பேசியிருப்போம். ஆனால், ஆட்டத்தின் முக்கியமான நேரங்களில் கேட்சுகளை நாங்கள் தொடர்ச்சியாக நழுவவிட்டோம்.' என்று வருத்தமாகப் பேசினார்.

இலங்கை அணி, ஃபீல்டிங்க்கு உரிய கவனம் செலுத்துகிறதா என்ற கேட்டபோது, 'உண்மையில் எங்கள் அணி, இந்த தொடருக்காக மிகவும் கடுமையாக உழைத்தது. இன்று நாங்கள் நிறைய கேட்சுகளை தவறவிட்டோம் என்பது உண்மைதான். ஆனால், ஃபீல்டிங் சம்பந்தமாக எங்கள் பயிற்சியாளர்களிடம் இருந்தும் அணியினரிடம் இருந்தும் மிகவும் உண்மையான அதீத பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. எங்கள் ஃபீல்டிங்குக்கு நாங்கள் கட்டாயமாக கவனம் செலுத்தினோம்.' என்று தெளிவுபடுத்தினார். 

No comments

Powered by Blogger.