Header Ads



திருடனை பிடித்துக்கொடுத்த ரம்புட்டான்

வீடொன்றில் நுழைந்து 40 ஆயிரம் பெறுமதியான தங்க நகை மற்றும் பணம் திருடி சென்ற நபர் ஒருவர் ரம்புட்டான் தோலினால் பொலிஸாரிடம் சிக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த நபர் வீசிய ரம்புட்டான் தோலை மொப்பம் பிடித்து சென்று பொலிஸாரின் உத்தியோகபூர்வ நாய் “ஆடிஸ்” சந்தேகநபரை அடையாளம் காட்டியுள்ளது.

உடகம தெற்கு பியதிலக்க மாவத்தை வீடொன்றில் நுழைந்த திருடன் ஒருரே இவ்வாறு சிக்கியுள்ளார்.

திருடுவதற்காக சென்ற குறித்த சந்தேகநபர் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னர் அருகில் இருந்த ரம்புட்டான் மரத்தில் ஏறி ரம்புட்டான் காய்களை பறித்து சாப்பிட்டு விட்டு தோலை வீட்டு வாசலில் வீசி சென்றுள்ளார்.

பின்னர் வீட்டிற்குள் நுழைந்த திருடன் அங்கிருந்த பணம் மற்றும் தங்க நகைகளை திருடி விட்டு தப்பி சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய காலி பொலிஸ் உத்தியோகபூர்வ நாயை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பொறுப்பான பொலிஸ் கான்ஸ்டபிலுடன் நாய் அங்கும் இங்கு சென்றுள்ளது. பின்னர் வீட்டு வாசலில் கிடந்த ரம்புட்டான் தோலை நாய் மோப்பம் பிடித்துள்ளது.

பின்னர் அந்த ரம்புட்டான் தோலின் ஊடாக முன்னோக்கி சென்ற நாய் அருகில் இருந்து முச்சக்கரவண்டிக்குள் சென்றுள்ளது. அதனை தொடர்ந்து முச்சக்கரவண்டியில் இருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.