Header Ads



கிறுக்கனாய் இருந்தவன், ஹீரோவாய் வலம் வருவான்


கொடியோனைப் பிடிக்க
பிடியாணை வந்திருக்கு
அடியேனின் கருத்தென்றால்
அவனைப் பிடிக்காமல்
ஒழித்திருக்க விடுவதே
ஒரு வகையில் சிறந்தது.

ஒழித்திருக்கும் காலத்தில்
ஊளை இட மாட்டான்
வெளி உலகம் இவனொரு
வெங்காயம் எனப் புரிந்து கொள்ளும்.
சேனாவில் உள்ளவர்க்கும்
தானாய்ப் பயம் வரும்
வீணாய்ப் போனவனின்
வீரம் விளங்கி விடும்

பிடி பட்டு வந்தால்
பிறகு உயர் மட்டும்
விடுதலை கொடு என்று
தறு தலைக்கு சபோர்ட் செய்யும்
அப்படி வெளி வந்தால்
அப்புறம் விஷம் கூடி
கிறுக்க'னாய்' இருந்தவன்
ஹீரோவாய் வலம் வருவான்

ஆதலால் ஆசாமி
அங்க இங்க ஒழிச்சிக்கிட்டு
ஏதும் பேசாமல்
இருப்பதும் நலவென்றே
உள் மனம் சொல்கிறது
உண்மை நிலை யாமறியோம்

Mohamed Nizous

1 comment:

  1. 100% சரி கிறுக்கன இப்படிய விட்டாலும் நல்லம்தான் போல்

    ReplyDelete

Powered by Blogger.