Header Ads



காசாவில் இஸ்ரேலின் மின்சார வெட்டு - ஆபத்தில் முடியும் என ஹமாஸ் எச்சரிக்கை

பலஸ்தீன பகுதியின் துன்பங்கள் மற்றும் பதற்றத்தை அதிகரிக்கும் என்ற எச்சரிக்கைகளை மீறி காசாவுக்கான மின்சார விநியோகத்தை இஸ்ரேல் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் குறைக்க ஆரம்பித்துள்ளது.

இந்த மின்சார வெட்டு காசாவுக்கு நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் மாத்திரமே மின்சாரம் கிடைக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அங்குள்ள பெரும்பாலான வர்த்தகங்கள் மற்றும் வசதி கொண்டவர்கள் சொந்தமான ஜெனெரட்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையை தளமாகக் கொண்ட பலஸ்தீன அதிகார சபை காசாவுக்கான மின்சார கட்டணத்தை செலுத்தப்போவதில்லை என்று இஸ்ரேலிடம் கூறியதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிரிகளாக செயற்படும் காசாவை ஆளும் ஹமாஸ் மற்றும் மேற்குக் கரையின் பத்தாஹ் அமைப்புகளுக்கு இடையிலான சமரச முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. எனினும் இம்மாதம் வரை காசாவுக்கான சில மின்சார விநியோகங்களுக்கு பலஸ்தீன அதிகார சபை இஸ்ரேலுக்கு கட்டணம் செலுத்தி வந்தது.

இந்நிலையில் காசாவுக்கான எட்டு மெகாவோட்கள் மின்சாரத்தை இஸ்ரேல் குறைத்திருப்பதாக காசா மின்சக்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை வரை இஸ்ரேல் காசாவுக்கு மாதம் ஒன்றுக்கு 120 மெகாவோட்கள் மின்சாரத்தை விநியோகித்து வந்தது. இது காசாவின் கால் பங்கு மக்களின் தேவையை பூர்த்தி செய்வதாக இருந்தது. இதற்காக பலஸ்தீன அதிகார சபை மாதாந்தம் 12.65 மில்லியன் டொலர் கட்டணம் செலுத்தியது.

காசாவில் வாழும் இரண்டு மில்லியன் மக்களில் கால் பங்கிற்கும் அதிகமானவர்கள் மனிதாபிமான உதவிகளில் தங்கி இருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் முற்றுகையில் இருக்கும் காசா மக்கள் ஏற்கனவே மின்சார பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மின்சார வெட்டுக்கு முன்னரும் அங்கு ஒருசில மணி நேரமே மின்சாரம் கிடைத்து வந்தது.

இந்த மின்சார வெட்டினால் ஏற்படும் பேரழிவுகளுக்கு இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும் என்று ஹமாஸ் குற்றம்சாட்டியது. இந்த நடவடிக்கை ஆபத்தில் முடியும் என்று ஹமாஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. 

23 comments:

  1. இதற்கு இஸ்ரேலுக்கு நன்றி அல்லவா நீங்கள் சொல்லவேண்டும்.

    90களின் ஆரம்பத்தில் யாழ்ப்பானத்தில் நாங்கள் மண்ணெண்ணை விளக்கில் படித்து தானே O/L, A/L exams எழுதின்னாங்கள்.
    சில வருடங்களாக நாங்கள் லைட்டையே அப்போது பார்த்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. சரி போனது போகட்டும் இப்ப Light இருக்குத்தானே படித்து o/l, a/l Pass பன்ன பாருங்க. யாழ்ப்பானத்திலேயே கிடந்து வெளி உலகம் தெரியாமல் சமூகமயமாகாமள் வளர்ந்த உங்களுக்கெள்ளாம் என்னடா தெரியும்? யாழ்ப்பானத்திற்கும் பலஸ்தீனுக்கும் என்னடா தொடர்பு?

      Delete
  2. நாம் 1990களில் மண்ணெண்ணையில் மோட்டார்சைக்கிள் ஓடீயது.சைக்கிள்டைனமோவில் படித்தது.பனம்பளத்தில் சோப் தயாரித்தது.இவையெல்லாம் இவர்களால் யோசித்தும் பார்க்க முடியாது.நாம் பட்ட அனைத்துமே ம்மை வைராக்கியமாக வைத்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அதுதான் நீயும் Ajan Antony யும் இன்னும் மண்ணெண்ணையாகவே இரிக்கிங்களா? ஐயோ பாவம்

      Delete
    2. வைராக்கியமாக வைத்ததின் விளைவு என்ன குமாரு? இன்று அதே உங்கட வட இலங்கை சமூகம் போதைபாவனைக்கு அடிமையாகி கல்வியில் மந்தமான நிலைக்கு வந்துவிட்டதே. உங்கட சமூகத்தை பீற்றி பீற்றி நடு வீதிக்கு கொண்டுவந்துவிட்டிர்கள். நீங்கள் கடைசிவரை வெட்டி பந்தா மட்டுமே பேசிக்கொண்டிருப்பீர்கள் புலி தீவிரவாதிகள் ஆயுதம் ஏந்த முதல் ஆயுதம் ஏந்தியவர்கள் பாலஸ்தீனர்கள். எச்சை புலிகளுக்கு பயிற்சியும் கொடுத்தவர்கள். புலிகளோ மிச்சம் மீதி இல்லாமல் அடியோடு அழிந்துபோயிட்டர் பலஸ்தீனர்களோ இன்றுவரை போராடி கொண்டிருப்பவர்கள் அவர்களை பார்த்து நீர் ஏளனம் செய்ரீர். கால கொடுமை

      Delete
    3. பலஸ்தீனர்கள் போராடினார்கள் நாங்கள் போராடினோம்.நீங்கள் என்ன செய்தீர்கள்??

      Delete
    4. தேங்காய் திருகினோம்!!!!

      Delete
  3. Hams is the elected government by its own people, unlike some other groups. Hams never live laxury life with the aids they get. On the other hand some groups have collected money and it didn't get to the people. After the end of war it's being used by certain individuals now.

    ReplyDelete
  4. டேய்! அந்தோனி !
    இஸ்ரேல் என்பது வளைகுடாவில் தப்பிப்பிறந்த (இதற்கு இன்னுமொரு சொல் உண்டு) குழந்தை பலஸ்தீன் மக்களின் நிலங்களை அமெரிக்க, மேற்குலக நாடுகள் கபளிகரம் செய்து அவர்களது வளங்களையும் பறித்தெடுத்துவிட்டு இப்ப பிச்சைபோடுவது போன்று நடந்து கொள்கின்றது.
    இதனை வடபகுதியோடு ஒப்பிட்டு நன்றி சொல்ல வேண்டும் என்று கிறுக்கன் போன்று குறிப்பிடுகிறாய். நீயும் உனது பாசிச புலியும் அழித்த மின் மாற்றிகளின் பட்டியலின் நீளம் உமக்குத்தெரியுமா?

    ReplyDelete
  5. முஸ்லிம்களுக்கு கஷ்டம்.என்றால் சந்தோசம் கொள்ளும் சில அற்பிராணிகள்

    ReplyDelete
    Replies
    1. தமிழ் தீவிரவாதிகளுக்கு முஸ்லிம்கள் அழிந்தால் பலத்த இன்பம். இலங்கையிலும் சிங்களவன் முஸ்லிம்களை அடிக்கணுமெண்டு நாக்கை தொங்கவிட்டு கொண்டு தானே அலையிதுகள்

      Delete
  6. அப்ப நீர் இலஙகை படை செய்தவை எல்லாம் சரி என்றும். அவர்கள் உணவும் மண் எண்ணெய்யும் தந்ததட்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளாய்.

    ReplyDelete
  7. நான் 2 விடயங்கள் சொன்னேன். (1) 90களில் யாழில் எனது சொந்த அனுபவம். (2) இஸ்ரேல் அரசு மின்சாரம் கொடுப்பது.

    இதற்கு எதற்கு இவர்கள் எல்லாரும் வரிஞ்சுகட்டிகொண்டு குலைகிறார்கள்?.

    ReplyDelete
  8. நாய் குறைக்கும ்போது அதை துரத்த வேன்டும் அல்லவா.

    ReplyDelete
  9. YES MR. AJAN WE ALSO DIDN'T FORGET OR FORGIVE 1990S WHICH WAS DID BY LTTE FOR MUSLIMS!
    YOU DON;T DREAM THAT YOU WILL GET SEPARATE STATE! EVEN WE NEVER ALLOW TO JOINT NORTH + EAST. PROD BE A SRI LANKAN!

    ReplyDelete
    Replies
    1. @War Lankan, you seem to be worrying for nothing..
      what has Ltte done for you in 1990s?
      Has anyone contacted you to get permission to joint N & E?

      Delete
    2. YES MR. Peace lanka
      WE ALSO DIDN'T FORGET OR FORGIVE 1990S WHICH WAS DID BY Jihad terror FOR easttamilS!
      YOU DON;T DREAM THAT YOU WILL GET MUSLIMPROVINCE! EVEN WE NEVER ALLOW TO GET COSTAL MUSLIM DISTRICT.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  10. இங்கு யாரு comments பண்ணினாலும் பரவாயில்லை நல்ல ஆரோக்கியமான கருத்துகளை முன்வைத்து பேசிக்கொள்ளுங்கள் நாங்கள் தமிழ் பேசும் சகோதர்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

    ReplyDelete
  11. The world knows that which was made by LTTE for Muslim in East & North! Sri Lankan Muslim never ask tamil elam, & we don't need anyone permission.

    ReplyDelete
    Replies
    1. @peace lanka
      The world knows that which was made by jihad for tamils in East! Sri Lankan Muslim never ask tamil elam because they dont have any historical fundamental or heritage basics for claim sperate state,but tamils do have.

      Delete
    2. @peace lanka
      The world knows that which was made by jihad for tamils in East! Sri Lankan Muslim never ask tamil elam because they dont have any historical fundamental or heritage basics for claim sperate state,but tamils do have.

      Delete

Powered by Blogger.