நாங்களும் நோ போல், போடத் தொடங்கினால்...?
விக்கட்டுக்கள்
விழுந்து கொண்டிருக்க
இக்கட்டில் நிற்கிறது
இந்த சமூகம்
இரவு போட்ட போலில்
விறகாகி எரிந்த
விக்கட் எதுவென்று
விடிந்த பின் தெரிந்து விடும்.
அவர்கள்
அடிப்பதை
அப்படியே 'பிடிக்க'
எப்படியும் முடியும்.
ஆனால்...
நடுவரே இடையில்
நாடகமாடுவதால்
'எல்லை தாண்டிப்' போகின்றன
எல்லாப் பந்துகளும்.
தலைமை போடும்
வழமை போல்களால்
நிலைமை மாறுமென்று
நினைக்க முடியாது
தீர்ப்புக்கு எதிராக
third அம்பயாரிடம் சென்றால்
கமராப் பதிவைக்
காணவில்லையென்று
கழன்று கொள்கிறார்
நாங்களும்
நோ போல் போடத் தொடங்கினால்
நொந்து போகும்
இந்தப் பூமி என்பதால்
அந்த வழியை
அணுகாமல் இருக்கிறோம்
எங்கள்
அப்ரிடிகளை
அடக்கி வைத்திருக்கிறோம்
கெய்ல்களை
கெஞ்சிக் கேட்டிருக்கிறோம்
அதிரடியாய்
எதிரடி கொடுக்க வேண்டாமென
நீங்கள்
பந்தை ரகசியமாக
சுரண்டுவதும்
பூசுவதும்...
கண்டும்
காணாமல் இருக்கிறோம்
கலவரத்தை தவிர்ப்பதற்காய்
நிச்சயம்
நீங்களாகவே
ரன் அவுட் ஆகுவீர்கள்
என்ற நம்பிக்கையிலேயே
இன்னும் இருக்கிறோம்
எதுவும் செய்யாமல்.
அராஜக அணியின்
ஆட்டம் தோற்கும்
ஆண்டவன் இருக்கிறான்.
என்பது மட்டுமே
எங்களுக்கு ஆறுதல்
Mohamed Nizous
Cricket Vilaiyaattil " thaanaagavey run out" enru
ReplyDeleteonrillai ! Oadubavarai ethirani veelththa vendumey
thavira , azu thaanaagavey nigalvazuvalla !
"நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது."
ReplyDelete(அல்குர்ஆன் : 9:41)
www.tamililquran.com