Header Ads



தம் மானசீக வீரனாக, ஞானசாரரை அங்கீகரித்த அரசு

சிங்­க­ளத்தில்: கே.டபிள்யூ.  ஜன­ரஞ்­சன
தமிழில்: ஏ.எல்.எம். சத்தார்

அக்­கி­ர­மங்­க­ளுக்­கெல்லாம் கதா­பாத்­தி­ர­மேந்தி காவி­யுடை தரித்த கொலை வெறி­ய­னாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் இந்த தனி பிக்­கு­வுக்கு ஆச்­ச­ரி­யப்­ப­டத்­தக்க வாய்ப்­பொன்­றுதான் கிடைத்­தி­ருக்­கி­றது. அவர் சட்­டத்தின் முன் முகம் கொடுக்கத் தவறும் ஒவ்­வொரு நிமி­டமும் நாட்டில் சட்டம் எந்­த­ளவு தூரம் பாதா­ளத்தில் வீழ்ந்­து கொண்டி­ருக்­கி­றது என்­பதை உணர்த்திக் கொண்­டி­ருக்­கி­றது. அத்­துடன் அர­சுக்கும் இதன் மூலம் பலத்த அவ­மா­னம்தான் விளைந்து கொண்­டி­ருக்­கி­றது. 

முஸ்­லிம்கள் மீதான குரோ­தத்தை வளர்த்து வரும் அடிப்­ப­டை­வாத சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு பகி­ரங்க வீர­னாக ஞான­சார விளங்­கு­கிறார். வில்­பத்து வனங்கள் அழிப்பு, மன்­னாரில் காணிகள் கைப்­பற்றிக் கொள்ளல், பௌத்த சின்­னங்கள் அழித்தல், சிங்­கள இனம் பெரு­குவதை கட்­டுப்­ப­டுத்த முயற்­சித்தல், வர்த்­தகத் துறையில் மேலா­திக்கம் செலுத்­துதல் போன்ற சொல்ல முடி­யாத போலிக் கார­ணங்­க­ளை­யெல்லாம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்துக் கொண்­டி­ருக்கும் சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு இன்­றி­ருக்கும் மாவீரன் ஞான­சார தேரர்தான்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல­வா­றான கட்­டுக்­க­தை­க­ளையும் பரப்­பியும் பல்­வேறு  உரு­விலும் பல்­வேறு அமைப்­புக்­க­ளா­கவும் திரண்டு அடிப்­ப­டை­வா­திகள் களத்தில் குதித்­தி­ருக்­கி­றார்கள். இவை அனைத்­துக்கும் ஞான­சார தேரரே தலை­மைத்­துவம் வழங்கி முன்­ன­ணியில் திகழ்­கிறார். தன்னை வீர­னாகக் காட்டிக் கொள்ளும் போர்­வை­யி­லேயே ஞான­சார இவ்­வாறு துடித்துக் கொண்­டி­ருக்­கிறார். இன்னும் அடிப்­படைவாதத்­திற்கு பகி­ரங்­க­மாக ஆத­ர­வ­ளிக்­காத இலங்கை மக்கள் மத்­தியில் தன்னைத் தொடரும் பௌத்த அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு எத்­த­கைய பீதி­யு­மின்றி செய­லாற்­று­வ­தற்கு ஆக்­கமும் ஊக்­கமும் ஊட்டிக் கொண்­டி­ருப்­பது ஞான­சார தேரர்தான். அது அவ­ரது காவி­யு­டை­த­ரித்த பிக்கு என்ற பலத்தைப் பயன்­ப­டுத்­தியே சாதித்துக் கொண்­டி­ருக்­கிறார்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இலக்கு வைத்து செயற்­படும் நட­வ­டிக்­கை­களும் இவர்­க­ளது நோக்­கமும் என்­ன­வென்று நன்கு தெளி­வா­கவே புலப்­ப­டு­கின்­றன. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக எல்லாப் புறங்­க­ளில் இருந்தும் இயன்ற வரை­யான எதிர் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வது, தாக்­கு­தல்­களை மேற்­கொள்­வது, தமது தலை­வ­ரான ஞான­சார தேர­ருக்கு போதிய பாது­காப்பு வழங்­கு­வது போன்ற காரி­யங்­க­ளிலும் இது­வரை ஈடு­பாடு காட்டி வரு­கி­றார்கள். இத்­த­கை­யோரை இல­கு­வாக இனங்­கண்டு கொள்ள முடியும்.

ஆனால் இனம் கண்­டு­கொள்ள முடி­யாத, இன்­னொரு கூட்­டமும் இருக்­கவே செய்­கி­றது. இத்­த­கை­யோரை இனங்­காண்­பது சிக்­க­லா­கவும் விரைவில் இனங்­கண்டு கொள்ள முடி­யா­மலும் இருக்­கிற இக்கூட்­டத்­தினர் குறித்து தான் நாம் சிந்­திக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. சிங்­கள மக்கள், சிறு­பான்­மை­யி­ன­ரான தமிழ், முஸ்லிம் மக்­க­ளுடன் ஒருதாய் மக்கள் போல் இருக்க வேண்டும்; சமா­தானம், சக­வாழ்வு போன்ற பண்­பு­களை நாடு முழு­வதும் விதைக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே மறு­த­லை­யாக கரண மடிக்கும் சிலரே மேலே சுட்­டிக்­காட்­டி­யுள்ள அடுத்த கூட்­டத்­தி­ன­ரா­வர்.

இந்த சின்­னஞ்­சிறு நாட்டில் ஞான­சார தேரர் இவ்­வ­ளவு காலமும் மறைந்­தி­ருக்­கிறார் என்றால் அர­சாங்­கத்­தி­லுள்ள மிகவும் முக்­கி­ய­மான ஒரு­வரின் பாது­காப்பு அவ­ருக்கு வழங்­கப்­ப­டு­வதே கார­ண­மென ஊகிக்க முடி­கி­றது என்ற கருத்தை வெளி­யிட்­டி­ருந்தார்.

சில சில விட­யங்­களைச் செய்­வதன் மூலம் ஞான­சார தேரரைக் காப்­பாற்ற முயல்வோர் முன்பு குறிப்­பிட்ட இரண்டாம் கூட்­டத்தைச் சேர்ந்­தோ­ராவர். 

பொலி­ஸா­ருக்கும் அர­சாங்­கத்­துக்கும் இயன்ற வரையில் உள்­ளி­ருந்து மறை­மு­க­மாக அழுத்­தங்­களைக் கொடுத்து ஞான­சா­ரவைக் கைது செய்­வதில் நின்றும் தடுத்துக் கொண்­டி­ருப்போர் இவர்­க­ளாவர். மேல் மட்­டத்­தி­லுள்ள பொலிஸ் அதி­கா­ரிகள், அமைச்­சர்கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், முன்னாள் அர­சாங்­கத்தில் ஒட்டிக் கொண்­டி­ருந்­து­விட்டு இப்­போது இந்த அரசின் அபி­மா­னி­க­ளாக இருக்கும் அர­சி­யல்­வா­திகள், உயர்­நி­லை­யி­லுள்ள பிக்­கு­மார்கள் என்று ஒரு பெருங்­கூட்­டமே இந்த இரண்டாம் நிலைக் கூட்­டத்தில் அடங்­கு­கின்­றனர்.

எந்­த­வொரு விட­யங்­க­ளையும் செய்­யாது ஞான­சார தேரரை சட்­டத்தின் முன்­கொண்­டு­வ­ராது தடுக்கும் கூட­டத்தில் ஜனா­தி­பதி, பிர­தமர், பொலிஸ்மா அதிபர் உட்­பட அரச அதி­யுயர் மட்டத் தலை­வர்கள் காணப்­ப­டு­கி­றார்கள்.

இந்த ஆட்­சி­ய­மைப்­பதில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் மஹிந்த சிந்­த­னையின் ஒரு பகு­தி­யாக விளங்­கிய இன, மத­வா­தத்தால் நாடு எதிர்­கொண்ட நாச­கார அழி­வு­களை முன்­வைத்தே பத­விக்கு வந்­தனர் என்­பதே யதார்த்­த­மாகும்.

முஸ்லிம் பள்ளிவாசல்கள், வியாபார நிலையங்கள் தாக்கப்பட்ட குறித்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்கள் மேற்படி தாக்குதல் சம்பவங்கள் குறித்து விரிவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அறிய முடியவில்லை. குற்றமிழைத்தோர் பரந்தளவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவுமில்லை. மேற்படி பொறுப்பான பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு பொலிஸார் அவர்கள் கடமையைச் செய்யட்டும் என்று விட்டு விட்டு தன்பாட்டில் இருப்பதைத் தான் அரசு கண் துடைப்பாக செய்து கொண்டிருக்கிறது. முஸ்லிம் பள்ளிகள், வர்த்தக நிலையங்கள் தாக்கப்படுவது குறித்து பொலிஸார் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது, இருப்பது குறித்தும் ஞானசார தேரர் கைது செய்யப்படாமை குறித்தும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து கதைப்பதற்காக பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டனர்.

அதுவும் மிகவும் காலங் கடந்தே சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது.
அரசின் இத்தகைய செயற்பாடு எதனை உணர்த்துகிறது? ஞானசார தேரரை தம் மானசீக வீரனாக அரசு அங்கீகரித்திருப்பதை உணர்த்துவதாகத்தானே உள்ளது. 

நன்றி: ராவய

5 comments:

  1. Wau super govermentt i never seen all Sri lanka history this kind of goverment and officer.

    ReplyDelete
  2. இலங்கையில் நீதி நிலைநிறுத்தப்படவும் சிறுபான்மைச் சமூகங்களும் தேசிய நீரோட்டத்தில் சமஅந்தஷ்த்து வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்படவும் சிங்கள மக்களிடையே இத்தகைய முற்போக்கான பத்திரிகைகள் , எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சமயப்பெரியார்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என பல்துறைசார்ந்தவர்களும் உருவாக்கப்படுகின்றபோது அதற்கு சமாந்தரமாக சிறுபான்மையினரும் நம்பிக்கையோடு அவர்களை அங்கீகரித்து போசிக்கவேண்டும்.
    பரஸ்பரம் சந்தேக கண்கொண்ட பார்வையைக்கழைவதும் அவசியமாகும்.

    ReplyDelete
  3. LTTE PRABAKHARAN
    GOERGE BUSH
    FIR AWN
    KAAROON ALL ARE GOOD EXAMPLE
    How Allah Destroyed them.
    Please be wait and see.
    Allah newer leave oppressing people

    ReplyDelete
  4. While acknowledging this , we should be mindful of the fears of the majority community raised over and over by Min.Champika and Gnanasara himi , no matter how unreasonable it may sound. That is Muslims are gradually turning into Saudi Wahabists /extremists, and the telltale signs are the recently introduced, black niqab for females, jubba /thobes for males. In their perception in the future, there will be Afghanistan like violence here. How this reasonable concerns could be addressed in a realistic manner?

    ReplyDelete

Powered by Blogger.