Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு அநீதி, ஜெனீவாவில் ஆற்றப்பட்ட உரை

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. சபையில் நடைபெற்று வரும் 35வது மனித உரிமை மாநாட்டில், 13.06.2017ம் திகதி நடைபெற்ற உப மாநாட்டில், கலந்து கொண்ட ராஜ தந்திரிகள், மனித உரிமை செயட்பாட்டாளர்கள், சர்வேதேச ஊடகவியலார்கள், நெறி முறை அவதானிகள் மத்தியில்  இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் சகோதரர் முயிஸ் வஹாப்தீன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது. 

அந்த முழு உரையின் தமிழாக்கத்தை இங்கே தருகிறோம்.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

பெண்கள் மற்றும் பேரன்புக்குரியவர்களே, மேன்மைதங்கிய அவையினரே, நெறிமுறை அவதானிகளே, ராஜ தந்திரிகளே, சர்வதேச ஊடகவியலாளர்களே, மற்றும் அவைத் தவிசாளர் அவர்களே, இலங்கையில் இன முரண்பாடு மற்றும் உள்நாட்டு யுத்தம் என்பன  அனைத்து இன குழுக்களுக்கிடையில் பாரிய துன்பங்களை உருவாக்கியுள்ள விடயம்  என்பது  பரவலாக அறியப்பட்ட உண்மையாகும். 

கடந்த சில மாதங்களாக முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.  இனவெறி மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் காரணமாக, கோர்க்கப்பட்ட மணி மாலையின் மணிகள் கழன்று சிதறுவது போல ஒன்றன் பின் ஒன்றாக  முஸ்லீம்களுக்கு எதிரான விரோத நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த ரமலான் கால  சூழ்நிலையில், பொது பல சேனா  மற்றும் அதன் சகோதர அமைப்புகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களால் முஸ்லீம் சமூகம்  பெரும் இன்னல்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்த விடயம் சம்பந்தமாக  நான் ஜெனீவாவில் ஐ.நா. சிறுபான்மையின விவகாரங்களுக்கான  விசேட அறிக்கையாளரின்  பிரதிநிதியுடன்  இரண்டு வாரங்களுக்கு முன்னர்  ஒரு அறிக்கையை சமர்பித்தேன். இந்த விஷயத்தைப் பற்றி குறைந்தபட்சம் சில அம்சங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இதனால் பொது பல சேனா, சிங்கள ராவய, ராவண பலயா போன்ற அமைப்புக்கள் மீள் எழுச்சி பெற்றன.  பிறகு அவர்கள் ஒன்று  சேர்ந்துகொண்டனர். 'பேஸ்புக் வீரர்கள்' - மகாசன் பாலாயா, சிங்கள ஜாதிகா பாலமுலுவை மற்றும் டான் பிரசாத் போன்ற புதிய தகவல்  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இனவாத  மற்றும் வன்முறை செய்திகளை பரப்பும் அமைப்புக்களும் உருவாகின. 

அரசாங்கத்தின்  எந்தவித கடுமையான நடவடிக்கை எடுக்காமையினால், ஞானசார கும்பல்   சிறுபான்மையினருக்கு எதிராக  பெரிய இனவாத நடவடிக்கைகளை தொடர்ந்தன.  சிங்கள பெளத்த வாக்கு வங்கியின் ஆதிக்கத்தை இலக்கு வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருகின்றது. 

பொலிஸில் பல  புகார்கள் முஸ்லிம்களால் முறைப்பாடு செய்யப்பட்டும், எந்தவித  சட்ட   நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முஸ்லீம்களுக்கான செயலகம் என்ற ஒரு  முஸ்லிம் சிவில் சமூக  அமைப்பானது 2013 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட  538 சம்பவங்களை  ஆவணப்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 16 ம் திகதி முதல், வன்முறை, அச்சுறுத்தல்  மத வழிபாட்டு தளங்கள் மற்றும் பிரதானமாக  முஸ்லிம்களுக்கு  சொந்தமான வர்த்தக நிறுவனங்களை தாக்குதல் என்பன அடங்கலாக  குறைந்தது இருபது ஐந்து வன்முறை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இந்த வன்முறைகளில் பொது பல சேனா, சிங்கள ராவய, சிங்களே, மகாசன் பாலாயா ஆகியவற்றுடன் இன்னும் சில அமைப்புக்களும் செயட்படுகின்றன.  

பொலிஸ் மற்றும் பொது பல  சேனாவின் கலாகொட அத்த ஞானசாராவிற்கும் இடையே ஒரு பூனை மற்றும் சுட்டி விளையாட்டு நடக்கிறது. போலீசார் அவரை கைது செய்ய 14  நாட்களாக  முயட்சிப்பதானது  மிகவும் வேடிக்கையானது. 

முழுமையான அமைதியையும், நல்லிணக்கமும் உருவாக வேண்டும். தங்களின்  தனிப்பட்ட மற்றும் கூட்டு பங்களிப்புக்களுக்காக,  என் உண்மையான நன்றிகளை  தெரிவிக்க விரும்புகிறேன். எல்லாம் வல்ல இறைவன் தனது அருளை பொழிவானாக.

3 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது,இந்தப் புனித றமழான் மாதத்தின் இந்த உரைசெரியான முறையோடு சம்மந்தப்பட்டவர்களின் காதைத் துளைத்து அடி மனதில் பதிந்து இருக்கும் அல்லாஹ் பதிய வைத்து இருப்பான் அல்ஹம்துலில்லாஹ் .உரையாற்றிய சகோதரர் அவர்களுக்கும் அவரோடு இப்பணியில் மும்முறமாக அக்கறை காட்டும் நம் சகோதரர்களின் பாவங்களையு,அவர்கள் பெற்றோர்களின் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்தருள்வானாக.அவர்களுக்கு தேக ஆரோக்கியத்தை கொடுத்து ஆயுள்களை நீடிப்பானாக ஆமீன்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் ஆமீன்

    ReplyDelete

Powered by Blogger.