Header Ads



"முஸ்லிம் தலைமைகளுக்கும் சேர்த்து, சல்வார்களை கொள்வனவு செய்யுங்கள்"

நடந்துகொண்டிருக்கும் அநீதிகளுக்கெதிராக எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது வெறுமனே அப்பாவி மக்களிடம் பூச்சாண்டி காட்டிக்கொண்டு பதவிகளுக்குப் பின்னால் படுத்துறங்கும் எம் பெட்டை முஸ்லிம் தலைவர்களுக்கு எதிராக குரல் எழுப்பாமல் பேரினத்து இனவாதிகளுக்கு எதிராக இங்கு நாங்கள் எழுதுவதும் ஆத்திரம் கொள்வதும் மடமையல்லவா?

எரிந்து நாசமாகிக்கொண்டிருக்கும் எம் மக்களின் பொருளாதாரத்தைப் பற்றி கண்டும் காணாமல் தலைமைகள் என்னும் பெயரில் தங்கள் பதவிகளை அலங்கரித்துக் கொண்டு வெறும் பொம்மை அரசியல் செய்யும் அசிங்கம் பிடித்த எம் தலைமைகளுக்கு எதிராக ஆர்பாட்டங்களும் கோசங்களும் ஓங்க வேண்டுமே தவிர வேறு யாருக்கும் எதிராக அல்ல என்பதை புரிந்து கொள்ளாமலா இருக்கிறோம்?

பேசவேண்டிய இடத்தில் பேசாமல் பதவி என்ற ஒன்றுக்காக இனவாதிகளின் காலடியில் அவர்களின் பாதங்களை நக்கிக்கொண்டு படுத்துறங்குவதும், மக்களிடத்தில் மட்டுமே வந்து புதிதாய் முட்டையிட்ட  பேடு போல கொக்கரித்து திரியும் போலி அரசியல் கூத்தாடிகளுக்கு எதிராக அல்லவா அவர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட வேண்டும். 

இத்தனை இத்தனை கடைகள் எரிந்தும், எம் பொருளாதாரங்கள் நசுக்கப்பட்டும், எம் வளர்ச்சி முடக்கப்பட்டும், எம் உரிமை இல்லாதொழிக்கப்பட்டும், திறக்கப்படாத குருடாய்ப்போன கண்களையல்லவா எம் தலைவர்கள் கொண்டிருக்கிறார்கள். அந்த குருட்டுத் தலைமைகளை இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் குருட்டு போராளிகளா நாம்?

எம் மார்க்கம் தவறாக சித்தரிக்கப்பட்டு, எம் இறைவன் கேவலமாக சித்தரிக்கப்பட்டு போனதெல்லாம் பெரிதாக படவில்லை, அவர்களின் அதிகாரமும் ஆசனமும் பெரிதா படுகிறதா? மக்களின் உரிமையை விட அவர்களின் பொருளாதாரத்தை விட அவர்களின் பதவி பெரிதா? அப்படி பெரிதாக அவர்கள் எண்ணிக்கொண்டு இருக்கட்டும். ஆனால் அப்படியான போலி பொண்ணைத் தலைமைகளை தூக்கி வீச, நடுவீதியில் வைத்து அடித்து விரட்ட, அவர்களின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிந்து ஊரைவிட்டு ஓட செய்ய முடியாத நாங்கள் என்ன பேச முடியும் இனவாதிகளுக்கு எதிராக?

ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள்...

பொதுபலசேனா, ஞானசார, சம்பிக்க, ரணில்,மைத்திரி போன்றவர்களை விட இலங்கை முஸ்லிம்களுக்கு பயங்கரமான எதிரிகள் தான் பாராளுமன்றத்தில் உள்ள எம் முஸ்லிம் தலைமைகளும் எதிரக்கட்சி தலைமையாக இருக்கும் சம்பந்தனும். எதிர்க்கட்சி ஆளும்கட்சிக்கு சோப் போட்டு விடும் ஒரு அரசாங்கத்தை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

அதைவிட பெரும் கவலைக்குரிய விடயம்தான் வாய்திறந்து பேசத்தெரியாத பல பெட்டைகளை பாராளுமன்றத்திற்கு நாம் அனுப்பி வைத்துள்ளது. இதற்கு மேலும் அவர்களை நம்பி, அந்தப் பெட்டை அரசியல் கேவலங்களுக்கு ஆதரவாக என் இந்தப்பதிவுக்கு கொமண்ட் செய்யவும் சிலர் வருவார்கள். அப்படியானவர்கள் இருக்கும்வரை முஸ்லிம் வியாபாரங்களும் கடைகளும், பொருளாதாரமும் எரிந்து கொண்டுதான் இருக்கும்.

-அஷ்ரப்-

4 comments:

  1. அந்த 21 பாவாடை தாவணிகளினதும் கடைகளோ , சொத்துக்களோ , குடும்பமோ ஏதும் இழப்புகளை சந்திக்காதவரை வாய்மூடி மௌனிகளாகவே இருப்பர்... இவர்களுக்கு எதிராக ஒரு முழு அடைப்பு போராட்டம் நடத்தாவிடின் அது நம் பிழையாகாதா?

    ReplyDelete
  2. எழுத்து நாகரீகம் பேணாத ஆக்கம்.அடுத்து முஸ்லிம் அரசியல்வாதிகள் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கடுந்தொணியில் பேசியே வருகின்றனர். செய்திகளை அறியாதது போல் எடுத்ததெற்கெல்லாம் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது அநாகரீகமான பேச்சு. இந்த சமூகத்தில் எதை எடுத்தாலும் தீர்வு பற்றி பேசுவது, எழுதுவதை விட குற்றம்குறைகூறலே மிகைத்துக் காணப்படுகிறது.

    ReplyDelete
  3. ரணில் பொன்னயணும் பாவாடையுடன்தான் இன்று நாடு திரும்பியிருக்கிறான்.பார்க்கலாம் இன்றி றவாவது ஏதும் கடை எரிபடாமல் முஸ்லிம்கள் நிம்மதிப்பெருமூச்சு விடலாமா என்று ? உடனே ரணிலை சந்தித்து நாம் முஸ்லிம்கள் எல்லோரும் உண்ணாமல் பருகாமல் உங்களின் சுகத்துக்காகவே தவமிருந்ததாகவும் பிராத்தனைசெய்ததாகவும் சொல்லிக்கொள்வார்கள். ரணிலுடன் பிலைட்டில் பக்கத்தில் சீட் காலியாக இருந்தும் மடியில் அமர்ந்து ரோமியோ ஜூலியட் ஜோடி போல் நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக ஒன்றுமே நடக்காதது போலவும் மௌன விரதத்தோடு சென்ற ரவூப் காக்காவுக்குத்தான் முதலில் சல்வாரி போர்த்தி அழகு பார்க்க வேண்டும். பின்னர் ஏனைய 20 பேரும் தானாக தாவாணி போட்டுக்கொள்வார்கள்.

    ReplyDelete
  4. Muslim MPs spoked in parliament. Islamic organization have met the authorities. What else they can do ? Don't just blame.

    ReplyDelete

Powered by Blogger.