Header Ads



ரணிலுடன் இணைந்திருந்த ஞானசாரா, பின்பு மஹிந்தவின் ஆத­ர­வா­ள­ரானார்...!

பொது­ப­ல­சே­னாவின் ஞான­சா­ர­தேரர் மாத்­தி­ர­மல்ல, அவ­ரைப்போல் முஸ்லிம், தமிழ் அமைச்­சர்­களும் எம்­பிக்­களும் வெறுப்­பு­ணர்வைத் தூண்டும் பேச்­சுக்­களை பேசு­கி­றார்கள். இது தொடர்­பாக விசா­ரணை நடத்தி சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக உட­ன­டி­யாக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்­சரும் ஜாதிக ஹெல உறும­யவின் செய­லா­ள­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். 

பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள ஜாதிக ஹெல உறு­ம­யவின் அலு­வ­லகத்தில் மதியம் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.  அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

முஸ்­லிம்கள் தமது கடைகள், பள்­ளி­வா­சல்­க­ளுக்கு எதி­ராக 25 சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறு­கி­றார்கள். இந்­துக்கள் கிழக்கில் 61 கோயில்கள் அழிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறு­கி­றார்கள். கிறிஸ்­த­வர்கள் தங்கள் ஆல­யங்கள் அழிக்­கப்­பட்­டுள்­ளன என்­கி­றார்கள். பௌத்­தர்கள் தங்கள் தொல்­பொருள் பிர­தே­சங்கள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அழிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் முறை­யி­டு­கி­றார்கள். இச்­சம்­ப­வங்­களின் பின்­ன­ணி­யுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் இருக்க வேண்டும். பொலிஸார் இந்த சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை தரா­தரம் பாராது கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்த வேண்டும். 

இலங்­கையில் மாத்­தி­ர­மல்ல உல­கெங்கும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் நடந்­தே­று­கின்­றன. ஜேர்­ம­னியில் 97 பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன. இதே­போன்று இங்­கி­லாந்து, அவுஸ்­தி­ரே­லியா, அமெ­ரிக்­காவில் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன. பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான், ஈராக்கில் கிறிஸ்­த­வர்கள் ஆயி­ரக்­க­ணக்கில் கொலை செய்­யப்­ப­டு­கி­றார்கள். ஷியா – சுன்னி கல­வ­ரத்தில் அநேகர் இறக்­கி­றார்கள். 

ஞான­சா­ர­தேரர் ஜாதிக ஹெல உறு­மய கட்­சியில் இருந்து 2004 ஆம் ஆண்டு விலகிச் சென்றார். நாம் பிக்­கு­க­ளுடன் செயற்­படும் போது அவர்­க­ளுக்கு கௌர­வ­ம­ளிக்கும் வகையில் செயற்­பட்டோம். ஞான­சா­ர­தேரர் எம்­முடன் இருக்கும் போது எவ்­வித பிரச்­சி­னையும் ஏற்­ப­ட­வில்லை.  2004 இல் எம்­மி­ட­மி­ருந்து பிரிந்து சென்ற ஞான­சா­ர­தேரர் 2005 இல் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து கொண்டார். பின்பு 2010 இல் சரத்­பொன்­சே­கா­வுடன் செயற்­பட்டார். அதன் பின்பு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆத­ர­வா­ள­ரானார். திஸ்ஸ­  விதா­ரண ஞான­சா­ர­தேரர் தொடர்பில் என்னை குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இணைந்த எதிர்க்கட்சியினருக்கும் சட்ட ஆலோசனை வழங்கும் ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரே ஞானசாரதேரரின் சட்டத்தரணியாக செயற்படுகிறார்.

 ARA.Fareel

1 comment:

  1. நம்பிட்டோடோம்ம்ம்!!!??? ஆக முஸ்லிம்களூக்கும் அநீதி செய்வதில் நாம் பின் வாங்கமாட்டோம் அதானே

    ReplyDelete

Powered by Blogger.