Header Ads



அமெரிக்காவை வெறுப்பவரினால், கத்திக் குத்து

அமெரிக்காவின் மிச்சிக்கன் விமான நிலையத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் தீவிரவாத செயல் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. சந்தேக நபரான 50 வயது அமொர் பதூஹி, பொலிஸ் அதிகாரியின் பின்புறம் மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் குத்தும் முன்னர் ‘அல்லாஹு அக்பர்’ என்று கூச்சலிட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான லுடினன்ட் ஜெப் நெவில்லே மருத்துவமனையில் ஸ்திரமான நிலையில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை பயணப்பொதியுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்த பதூஹி, 12 அங்குல கத்தியை உருவி தாக்குதல் நடத்தும் காட்சி பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

எப்.பி.ஐ அதிகாரி டேவிட் கெலியஸ் ஊடகங்களுக்கு குறிப்பிடும்போது, தாக்குதல்தாரி ‘அல்லாஹ்’ என்றும் “நீங்கள் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கொலைகளில் ஈடுபடுகிறீர்கள். நாங்கள் அனைவரும் கொல்லப்படுகிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார் என்றார்.

எனினும் தாக்குதல்தாரி தனித்து செயற்பட்டிருப்பதாக சந்தேகிப்பதாக எப்.பி.ஐ குறிப்பிட்டுள்ளது. விசாரணைகளுக்கு பதூஹி ஒத்துழைப்பதாக குறிப்பிட்டிருக்கும் எப்.பி.ஐ அவர் அமெரிக்காவை வெறுப்பவர் என கூறியது. 

1 comment:

  1. முஸ்லிம் தீவிரவாதி அவ்வளவு தான்

    ReplyDelete

Powered by Blogger.