Header Ads



என், மாற்றுமத சகோதரனே...!


சகோதரனே..!
என்ன செய்துவிட்டோம் உங்களை?
நாங்கள் முஸ்லிம்கள் அமைதியையே விரும்புபவர்கள்!
ஓர் இறைவனையே வணங்குகிறோம்!
உங்களையும் அதன்பால்தான் அழைக்கிறோம் 
ஆனாலும் நிர்ப்பந்தமில்லை!
எத்திவைத்தலோடு எங்கள் வேலை முடிந்து விட்டது!

சகோதரனே!
எது நம்மை பகைக்க வைத்தது?
எங்கள் பொருளாதார வளர்ச்சியா?
வாழ்க்கை முறையா?
சனத்தொகை வளர்ச்சிவீதமா?
ஏன் "இலங்கை மக்கள் நாம்" என்பதை மறந்தீர்கள்?

சகோதரனே!
தொல்பொருளை எது வணங்கு பொருளாக்கியது?
தொல்பொருளாயிருப்பின் இலங்கையரே பாதுகாவலர்!
குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் என்றதால்தானே
வந்தது வினை என்பதை மறைத்தது எதுவோ?

சிற்றுயிரைக்கூட தீயிட்டு கொல்லாதே என்ற
மார்க்கத்தில உள்ளவர்கள் சகோதரனே!

நாங்கள் விழித்தெழுகையில்
எங்கள் உடைமைகள் இரையாக்கப்பட்டிருக்கும் தீயிற்கு!

வியர்வைத்துளிகளால் கட்டப்பட்ட கோபுரம் 
வீணாய் எரிகிறது வஞ்சக உள்ளத்தாரினால்!

எங்களை நஷ்டமடையவைத்து 
நீங்கள் பெற்ற நன்மைகள்தான் என்ன சகோதரனே?
நாட்டின் பொருளாதாரம் அழிகிறது என்பதை மறக்கடித்தது எது?

சகோதரனே!
இனவாதம் 
பேசுமொழியாயிருந்து செயன்மொழியானது எதற்காக?
நீங்கள் உயர்வடைய இதுவல்ல வழி!
எங்களை பின்பற்றாமல் 
எங்கள் மார்க்கம் சொல்லும் வழி சென்று பாருங்கள்!

சகோதரனே!
அநீதி இழைக்கப்பட்டுவிட்டது
நீங்களும் அறிவீர்கள்!
எங்கள் குரல்கள் கேட்கவில்லை படைப்பினங்களுக்கு
கேட்டிருக்கும் படைத்தோனுக்கு!
எரிந்ததையும் எரிப்பீர்களா எங்கள் உளமதை!

எங்கள் நம்பிக்கை உறுதியாகிறது!
மீண்டு வருவோம்
உங்களையும் எங்களையும் படைத்தவனின்
பாதுகாப்பரணோடு!
அப்போது நீங்களும் எங்கள் பக்கம் இருக்க வேண்டுமென்பதே எம்பிரார்த்தனை சகோதரனே!

✍️ Dr அப்துல் ரஷாக் 

No comments

Powered by Blogger.