Header Ads



சுவிஸில் அப்துல்லாஹ் பாயிஸ் மௌலவியின், ரமழான் சிறப்பு நிகழ்ச்சி

இலங்கையைச் சேர்ந்த அப்துல்லாஹ் பாயிஸ் மௌலவி தற்போது சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இவரது சிறப்பு ரமழான் நிகழ்ச்சிகள் 07.06.2017 தொடக்கம் சூரிச் - சிலீரன் மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

தினமும் இப்தார் நேரம் பயான் (8.45 முதல் மஹ்ரிப் தொழுகை வரை)

தினமும் தறாவிஹ் தொழுகை, வாரநாட்களில் கியாமுல் லைல் தொழுகை.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜும்ஆ தொழுகை (நேரம் பிற்பகல் 1.30 முதல்)

அத்துடன் ரமழான் பிறை 27 அன்றும் சிறப்பு ரமழான்  நிகழ்ச்சிகள் நடைபெறும்

மேலும் பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் குத்பாவையும் அப்துல்லாஹ் பாயிஸ் மௌலவியே நிகழ்த்துவார் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் இந்த ரமழான் கால சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறும், இந்த தகவலை ஏனைய இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்களுக்கு எத்திவைத்து அவர்களையும் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு ஊக்கப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.