Header Ads



குவைத்தில் இலங்கையர் தற்கொலை (படம்)


இலங்கையர் ஒருவர், குவைத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அந்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குவைத்தில் உள்ள Ardiya பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய குறித்த இலங்கையர், மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, உயிரிழந்தவர் இலங்கையிலிருந்து புகலிடம் கோரி குவைத் வந்துள்ளார் என தெரியவந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.