யானை தாக்கி, தேரர் பலி, பக்தர்கள் சிதறியோட்டம் - கட்டானையில் சம்பவம்
கட்டானை ஸ்ரீ வர்தனாராம விகாரையில் பொசன் பெரஹர நடைபெற்றபோது பெரஹரவில் கலந்து கொண்ட யானை ஒன்று தாக்கியதில் பௌத்த தேரர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கரம்பே ராஹுல தேரரரே (26) உயிரிழந்தவராவார்.
யானை குழப்பமடைந்ததையடுத்து மக்கள் ஓட்டம் எடுத்த போது உயிரிழந்த தேரரை யானை தும்பிக்கையால் இழுத்து கீழே வீழ்த்தி காலால் மிதித்துள்ளது.
பெரஹர சென்று கொண்டிருந்தபோது குறித்த தேரர் யானையின் வலது பக்கமாக சென்று கொண்டிருந்த போது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தையடுத்து காயமடைந்த தேரரரை நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை தெரிய வந்தது.
தேரரின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
யானையிடம் விசாரனையா?
ReplyDeleteவழிபாடு என்ற பெயரில் மிருகங்களை கூட்டி அலைவதை தடுத்தாலே போதுமானது.
MR. Inman! மாற்று மத்தவர்களது வழிபாட்டு முறைகளை நாம் ஒருபோதும் கிண்டல் செய்யக்கூடாது. இஸ்லாம் அதனை அனுமதிக்கவுமில்லை. "லெக்கும் தீனுக்கும் வொலியதீன் " என தமக்குள் தாம் கூறிக்கொள்ள வேண்டியதுதான்.
DeleteDeepest sympathy for late young Buddhist monk
ReplyDelete