Header Ads



இழி­வான செய­லைக்­கண்டு வெட்­கப்­பட வேண்­டி­யவர் இந்­நாட்டின் ஜனா­தி­ப­தியே.

ஒவ்­வொரு சம­யமும் மனி­த­னுக்கு நல்­ல­வற்­றையே போதித்­துள்­ளன. எம் மத்­தியில் பல­ம­தங்கள் காணப்­ப­டு­கின்­றன. கிறிஸ்­தவம், இந்து, பௌத்தம், இஸ்லாம் போன்ற மதங்கள் காணப்­படும். அதே­வேளை ஒரு நாட்டில் வாழும் ஒரு பிர­ஜை­ அவர் விரும்பும் மதத்தில் சுய­மா­கவும் சுதந்­தி­ர­மா­கவும் செயற்­பட, வழி­பாட்டில் ஈடு­பட பூரண உரி­மை­யுண்டு. இவர்கள் பல மதங்­களைப் பற்­றி­ய­வர்­க­ளா­கவும் செயற்­ப­டு­கின்­றனர்.

அந்த வகையில் ஒரு இனத்­தவர் பின்­பற்றும் மத கோட்­பா­டு­க­ளுக்கு மாற்­று­ம­தத்தைச் சேர்ந்த இன்­னொரு இனத்­த­வர்­க­ளினால் அவர்­களின் மத கட­மை­களை நிறை­வேற்ற விடாமல் தடை செய்­வது, இடை­யூறு ஏற்­ப­டுத்­து­வது, அவ­ம­திப்­பது, தூசிப்­பது, அச்­சு­றுத்­து­வது, மதத்­த­வர்­களைத் தாக்­கு­வது போன்றவைகள் அர­சியல் யாப்பில் மதம், கலா­சார விட­யங்­களை வலி­யு­றுத்தும் 10,11,12 ஆம் சரத்­துக்கு சவால் விடும் ஒரு செய­லாகும்.

 இந்­நாட்டில் வாழும் முஸ்­லிம்­க­ளுக்­கென 1000 ஆண்டு கால பழை­மை­வாய்ந்த சிறப்­பான வர­லா­றுகள் உண்டு என்­ப­த­னையும் முஸ்லிம் மக்கள் வந்­தே­று­கு­டிகள் என்று கோஷ­மிடும் காவி­யு­டை­ய­ணிந்த இன­வா­தத்தைத் தூண்­டு­ப­வர்கள் புரிந்­து­கொள்ள வேண்டும்.

இலங்­கையில் வாழும் முஸ்­லிம்கள் இந்த இலங்கை எவ்­வ­ளவு பழைமை வாய்ந்­ததோ அவ்­வ­ளவு பழை­மை­யா­ன­வர்­களே இந்­நாட்டு முஸ்­லிம்கள் என 1956 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றில் உரை­யாற்­றிய போது முன்னாள் பிர­தமர் எஸ்.டபிள்யூ. ஆர். டீ. பண்­டா­ர­நா­யக்க குறிப்­பிட்டார். அந்த வகையில் இலங்­கையில் 8 ஆம் நூற்­றாண்டு முதல் இன்­று­வ­ரையும் முஸ்­லிம்கள் முன்­னைய கால சிங்­கள மன்­னர்­க­ளோடும் சிங்­கள மக்­க­ளோடும் மிகவும் நெருங்­கிய தொடர்­பு­டை­ய­வர்­க­ளா­கவும் வேண்­டி­ய­வர்­க­ளா­கவும் விளங்­கினர்.

1948 இல் இலங்­கையின் சுதந்­தி­ரத்­திற்­காக  சிங்­கள தலை­மை­க­ளோடு தோளோடு தோள் நின்று உழைத்த டீ.பீ.ஜாயா போன்­ற­வர்கள் உட்­பட அறிஞர் சித்­தி­லெப்பை, பாக்கிர் மாக்கார், பதி­யுதீன் மஹ்மூத் போன்­ற­வர்கள் இந்­நாட்டின் இன ஐக்­கி­யத்­திற்­கா­கவும் இன ஒற்­று­மைக்­கா­கவும் அய­ராது உழைத்­தனர். இதன் கார­ண­மாக அன்­றைய சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளி­னாலும் சிங்­கள மக்­க­ளாலும் முஸ்­லிம்கள் மதிக்­கப்­பட்­ட­துடன் நிம்­ம­தி­யா­கவும் வாழ்ந்­தனர்.

இந்­நாட்டில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ராக 1915 இல் முதன் முறை­யாக அந­கா­ரிக தர்­ம­பா­லவின் தலை­மையில் தொடக்கி வைக்­கப்­பட்­டது. கல­வ­ரத்தில் முஸ்­லிம்கள் பல கோடி­ரூபாய் சொத்­து­க­ளையும் உயிர்­க­ளையும் இழந்­தனர்.

இருந்தும் முஸ்­லிம்கள் பொறுமை காத்­தனர். இந்­நாட்டில் இன­வா­தத்தை  விதைத்­த­வர்கள் தமி­ழர்­களோ அல்­லது முஸ்­லிம்­களோ அல்லர் பௌத்­தர்­களே ஆரம்­பித்­தனர். இது போன்று துப்­பாக்கி கலா­சா­ரத்­தையும் பௌத்­தர்­களே ஆரம்­பித்து வைத்­தனர். 1959 ஆம் ஆண்டு எஸ் .டபி­ளியூ. ஆர். டீ. பண்­டா­ர­நா­யக்க இலக்கு வைக்­கப்­பட்டார். இதைச் செய்­த­வரும் ஒரு பௌத்த பிக்கு என்­ப­தையும் நாம் மறந்துவிட முடி­யாது. 

கண்­ணி­ய­மா­கவும் மேன்­மை­யா­கவும் படைக்­கப்­பட்ட மனிதன் ஏன் இவ்­வ­ளவு கீழ்த்­த­ர­மாக நடந்து கொள்­கின்­றார்­களோ தெரி­ய­வில்லை. இந்­நாட்டில் வாழும் 80 சத­வீ­த­மான சிங்­க­ள­வர்கள் இன­வா­தத்தை ஒரு­போதும் விரும்­பா­த­வர்கள். மாறாக இந்­நாட்டில் வாழும் சகல மக்­களும் இன ஐக்­கி­யத்­து­டனும் சமா­தா­னத்­து­டனும் வாழ­வேண்டும் என்றே விரும்­பு­கின்­றனர்.

உதா­ர­ண­மாக மறைந்த சோபித தேரர் சிறு­வ­ய­து­தொ­டக்கம் மரணம் வரை­யிலும் இந்­நாட்டு மக்­களின் இன­நல்­லு­றவைக் காப்­ப­தற்­காக அய­ராது உழைத்த மனி­தரில் மாணிக்­க­மாகும். இன்­றைய நல்­லாட்­சியைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­காக தன்­னையே அர்ப்­ப­ணித்தார். இந்­நாட்டில் முஸ்லிம் மத­த் தலைவர்­களோ அல்­லது ஐயர்கள், கிறிஸ்தவ குருமார்­களோ அர­சியல் செய்­வ­தில்லை.

ஆனால் காவி­யு­டை­ய­ணிந்த துற­வி­க­ளான பிக்­குகள் அர­சியல் செய்­வ­தோடு நின்று விடாமல் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு சவால் விடு­ப­வர்­களாக, சட்­டங்­களைக் கையி­லெ­டுத்­த­வர்­க­ளாக, நீதி­யையும் நியா­யத்­தையும் அவ­ம­திப்­ப­துடன் சண்­டி­யர்­க­ளாக, காடை­யர்­க­ளாக முஸ்­லிம்­களின் மத விவ­கா­ரங்­களில் தேவை­யில்­லாமல் மூக்கை நுழைத்து இஸ்­லாத்­தையும் அல்­லாஹ்­வையும் அவ­னது ரஸூ­லையும் நிந்­திப்­ப­துடன் நின்று விடாமல் முஸ்­லிம்­களை தூசித்தும் வசை­பா­டியும் வரு­கின்­றனர். 

இலங்கை பௌத்­தர்­களின் நாடு என்ற பாணியில் முஸ்­லிம்கள் வந்­தே­று­கு­டிகள் என்றும் கோஷம் எழுப்­பு­கின்­றனர். ஆனால் பொது­பல சேனா போன்ற இன­வா­திகள் இலங்­கையின் வர­லாற்றைப் புரிந்து கொள்­ளா­த­வர்­க­ளாக செயற்­ப­டு­கின்­றனர். இலங்­கையைப் பொறுத்­த­மட்டில் இங்கு வாழும் அனை­வரும் வந்­தேறு குடி­கள்தான் என்­ப­தனை மறந்­து­வி­டக்­கூ­டாது.

தற்­போது நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பொது­பல சேனா­வினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் அடா­வ­டித்­த­ன­மா­னது இந்­நாட்டை நேசிக்கும் எந்­த­வொரு ஜன­நா­யக மனி­த­னாலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. பௌத்­தத்­து­ற­விகள் தங்­களின் இடங்­க­ளி­லி­ருந்து தங்­களின் மதக்­க­ட­மை­களை செய்­ய­வேண்டும்.

அதுதான் அவர்கள் அணிந்­தி­ருக்கும் காவி­யு­டைக்கு செய்யும் மரி­யா­தை­யாகும். புத்த பெருமான் தனது போத­னையின் ஆரம்­பத்தில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான சமத்­துவம், சௌபாக்­கியம், சாந்தி, சமா­தானம், விட்­டுக்­கொ­டுத்தல், ஒழுக்க விழு­மி­யங்­க­ளையே போதனை செய்தார். ஆனால், தற்­போ­தைய இன­வாதம் கொண்ட சில பிக்­கு­களின் இழி­வான நட­வ­டிக்­கை­யா­னது புத்­த­பெ­ரு­மானின் நற் சிந்­த­னை­க­ளையும் ஒட்­டு­மொத்த பௌத்­தர்­க­ளையும் களங்­கப்­ப­டுத்­து­வ­துடன் முஸ்­லிம்­களின் உள்­ளங்­க­ளையும் புண்­ப­டுத்­து­வ­தா­கவே உள்­ளன. 

முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக பொது­பல சேனா­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட அடா­வ­டித்­த­னங்­களை வேடிக்கை பார்த்­த­தினால் ராஜ­பக் ஷ உள்­நாட்டில் மட்­டு­மன்றி, சர்­வ­தேச உல­கிலும் பாரிய அவ­மா­னத்தைப் பெற்­றுக்­கொண்டார். மேற்­படி அடக்­கு­மு­றை­க­ளி­லி­ருந்து விடு­ப­டவே கடந்த 2015 இல் முஸ்­லிம்கள் தற்­போ­தைய ஜனா­தி­பதி மீது நம்­பிக்கை வைத்து நல்­லாட்­சியைக் கொண்­டு­வ­ர­லா­யினர்.

முஸ்­லிம்­களின் மத உரிமை மற்றும் அனைத்து விட­யங்­க­ளையும் பாது­காப்பேன் என்று உறுதி வழங்­கி­யவர் தற்­பொ­ழுது பொது­பல சேனாவின் அடா­வ­டித்­த­னங்­களை தடுத்து நிறுத்த முடி­யாமல் இருப்­பதன் மர்­மம்தான் என்ன? சந்­தே­கங்­களை எழுப்­பி­யுள்­ளன. உண்­மை­யா­கவே இவ்­வா­றான இழி­வான செய­லைக்­கண்டு முதல் வெட்­கப்­பட வேண்­டி­யவர் இந்­நாட்டின் ஜனா­தி­ப­தியே.

இவ்­வா­றான அடா­வ­டித்­த­னங்­க­ளி­லி­ருந்து நாட்­டையும், ஜன­நா­ய­கத்­தையும், நீதி­யையும் சட்­டத்­தையும் அதன் மக்­க­ளையும் பாது­காக்­க­வேண்­டிய முழுப் பொறுப்பும் ஆட்­சி­யா­ளர்­களின் கட்­டாய கடப்­பா­டாகும். இஸ்லாம் ஒரு தூய மார்க்கம் என்ற அடிப்­ப­டையில் இந்­நாட்டில் வாழும் முஸ்­லிம்கள் அதனைப் பின்பற்­றி­ய­வர்­க­ளா­கவே ஏனைய மதத்­த­வர்­க­ளுடன் நல்­லி­ணக்கம் கொண்­ட­வர்­க­ளாக வாழ்ந்து வந்­துள்­ளனர்.

முஸ்லிம்கள் இந்நாட்டில் பல சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகம்கொடுத்தபோதும் அவைகளை மிகவும் பொறுமையுடன் எதிர்கொண்டார்கள். ஆனால், தற்போதைய முஸ்லிம்களுக்கெதிரான இந்த அடாவடித்தனங்களை நோக்கும்போது பொதுபல சேனாவின் முழு நோக்கமும் மியன்மாரில் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய ஒரு நிலைமையை உருவாக்கவே முயற்சித்துக்கொண்டிருப்பது தெளிவாகப் புரிகின்றது. 

சில இனவாத, கும்பல்களின் கேவலமான அட்டூழியங்களை முஸ்லிம்கள் மிகவும் நிதானத்துடனும், அமைதியுடனும் அணுகி, பொறுமை காத்தவர்களாக, நோன்பு நோற்றவர்களாக, ஐவேளை தொழுகையிலும் மேற்படி குளறுபடிகளில் இருந்து தம்மை விடுவித்து நாட்டில் நல்லிணக்கத்தையும், அமைதியையும், நிம்மதியையும் தரவேண்டுமென அந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் நாம் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபடுவோமாக.

-யூ.எல்.ஏ.மஜீட்-

4 comments:

  1. மதங்களை நிந்திக்கும் மதகுருவே உள்ள தேசமிதுவே. அதை மனதார இருந்து பார்த்துக் கொண்டு ஆட்சி செய்யும் தலைவரின் இடுப்பில் சக்தி உண்டோ தெரியாது.

    ReplyDelete
  2. Our leader my3 and janasara

    ReplyDelete
  3. He not deserve as a president just comedy man.

    ReplyDelete
  4. தெரியாய்த்தனமாக ஒட்டு போட்டுவிட்டோம் ,இனி சிந்தித்து வாக்களிப்போம்,

    ReplyDelete

Powered by Blogger.