Header Ads



ஒன்றரை வருடங்களை சிறையில் கழித்து, கை விலங்குடன் பரீட்சை எழுதிய மைத்திரிபால

தனது 19ஆவது வயதில் இலங்கையில் உள்ள மிகவும் கஷ்டமான சிறைச்சாலையில் ஒன்றரை வருடங்களை கழித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அண்மையில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கடந்த 1971 ஆம் ஆண்டு நடந்த ஜே.வி.பியின் புரட்சியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுக்கும் தனக்கும் எந்த தொடர்புகளும் இல்லை என்றாலும் தன் மீது குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 1972 ஆம் ஆண்டு கையில் விலங்குடன் உயர் தரப்பரீட்சையை எழுதியதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இன்னும் மைத்திரியின் புகழ் பாடிக்கொண்டிருக்க... என்ன "ஜப்னா முஸ்லிமு"க்கு ஏதும் சம்திங் கிடைக்குதோ?? தன்னை ஜனாதிபதியாக்கிய முஸ்லீம் மக்களுக்கு இன்னும் பச்சைத்துரோகம் இழைக்கும் மைத்திரி என்ன புனிதனா? ஏன் இன்னும் அவரது புகழ் பாடிக்கொண்டிருக்கிறீர்கள். இவ்வாறுதான் ஹக்கீமுக்கும் புகழும் பாடிக்கொண்டிருக்கிறீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.