Header Ads



இரத்தினபுரி முஸ்லிம்களுக்கு அல்குர்ஆன் பிரதிகள் தேவை

-எம்.எல்.எஸ்.முஹம்மத் -

வெள்ளத்தினால் பாரிய அனர்த்தங்களுக்குள்ளான இரத்தினபுரி முஸ்லிம் மக்களில் பலருக்கு அல்குர்ஆன் பிரதிநிதிகள் அவசியப்படுகின்றன.

இரத்தினபுரி நகர் பகுதிகளில் உள்ள அதிகமான வீடுகளில் 8 அடிக்கும் மேல் இம்முறை வெள்ளம் உயர்ந்ததால் சாதாரண உயரத்தில் வைத்து பாதுகாக்க ப்பட்டுவரும் அல்குர்ஆன் பிரதிநிதிகள் , மன்ஸிகள் ,சூரா யாஸீன் பிரதிநிதிகள் , இஸ்லாமிய நூல்கள்  மற்றும் ஹதீஸ் கிரந்தங்கள் அனைத்தும் முற்றாக சேதமடைந்த நிலையில் உள்ளன .

அத்துடன் சிறுவர்கள் மற்றும் கண் பார்வை குறைந்தவர்கள் ஓதிவந்த பெரிய எழுத்திலான குர்ஆன் பிரதிகளும் சேதமடைந்துள்ளன. 

எனவே இது தொடர்பாக அவதானம் செலுத்த விரும்புவோர்  இரத்தினபுரி மாவட்ட ஜம்மியா மற்றும் இரத்தினபுரி முஸ்லிம் வெள்ள அனர்த்த செயலனியின் செயலாளரை தொடர்புகொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக தொடர்புகளுக்கு 
அஷ்ஷெய்ஹ் ஸுபியான் (உதவிச் செயலாளர் இரத்தினபுரி மாவட்ட ஜம்மியா)071 823 43 29

No comments

Powered by Blogger.