Header Ads



விமானத்தில் குண்டுப் புரளி செய்த, இலங்கையர் இவர்தான்


மென்பேர்னில் இருந்து புறப்பட்ட மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் இலங்கையர் ஒருவர் ஏற்படுத்திய குண்டுப் புரளி, தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையது அல்ல என்று அவுஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு 11.11 மணியளவில் மலேசியன் எயர்லைன்ஸ் விமானம் மெல்பேர்ன் விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் நோக்கிப் புறப்பட்ட சற்று நேரத்தில், அதில் பயணம் செய்த இலங்கையர் ஒருவர் தன்னிடம் குண்டு இருப்பதாகவும், விமானத்தை வெடிக்க வைக்கப் போவதாகவும் சத்தமிட்டார்.

அத்துடன் அவர் விமானியின் அறைக்குள்ளேயும நுழைய முயன்றார்.

இதையடுத்து, புறப்பட்ட ஒரு மணிநேரத்திலே அந்த விமானம், மீண்டும் மெல்பேர்ன் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

உடனடியாக விமானத்துக்குள் நுழைந்த அவுஸ்ரேலிய கொமாண்டோக்கள், மிரட்டல் விடுத்த இலங்கையரைக் கைது செய்தனர்.

25 வயதுடைய மனோத் மாக்ஸ் என்ற பெயருடைய இலங்கையரே கைது செய்யப்பட்டவராவார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், இந்தச் சம்பவத்துக்கும் தீவிரவாத செயல்களுக்கும் தொடர்பில்லை என்றும் அவுஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் விமானப்பயணச்சீட்டை பெற்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.


4 comments:

  1. அண்டனி,குமரன் மற்றும் பாசிச புலி சமூகமே! மேலேயுள்ள செய்தி உங்களுக்கு சமர்ப்பணம்.
    மானங்கெட்டவர்களே!

    ReplyDelete
    Replies
    1. To Lafir (only), இவர் சிங்களவரோ தமிழரோ என சொல்லப்படவில்லை.

      யாராக இருந்தால் என்ன. இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும், எந்த பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பற்றவர் அவுஸ்திரியாவே சொல்லிவிட்டது.

      நல்ல காலம். உம்மைப்போல் இவரும் ஒரு ISIS முஸ்லிம் தீவிரவாதியாக இருந்திருந்தால் இப்போது 250 அப்பாவி உயிர்கள் பலியாகியிருக்கும்.

      Delete
    2. Dear lafir,
      Without any knowledge don't deliver such a words... like which you were mentioned...

      Delete
  2. Please don't blame a community for a mistake done by an individual.

    ReplyDelete

Powered by Blogger.