Header Ads



இனவாதத்துடன் சிக்கிக் கொள்ள வேண்டாம் - லால் காந்த

அதிகாரத்தை இழந்துள்ள சில அரசியல் குழுக்கள் அதிகாரத்திற்கு வருவதற்காக இனவாதத்தை பயன்படுத்தி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் பிரதேசத்தில் நேற்று (15) நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதனால், இனவாதத்துடன் சிக்கிக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்மைய காலத்தில் குறிப்பிட்ட இன மக்களுக்கு கடைகள், வணக்கஸ்தலங்கள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் குழுக்கள் இனவாதத்தை தூண்டி மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சித்து வருவதாகவும் கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. தோல்வியடைந்தவர்களை விட .. மக்களை (அதிலும் முஸ்லிம்களை) மடையர்களாக்கி தற்போது ஆட்சியை பிடித்துள்ளவர்களே மிக மோசமான இனவாதத்தில் சிக்கியுள்ளனர். நீங்கள் சம்பிக்க போன்ற இனவாதிகளை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம்!

    ReplyDelete

Powered by Blogger.