Header Ads



"இலங்கை வீரர்கள் காயமடைய, முக்கிய காரணம்" - அவுஸ்திரேலிய டாக்டரின் கண்டுபிடிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்­பந்­து­வீச்­சா­ளர்கள் பன்­னி­ரு­வரில் ஒன்­பது பேர் கடந்த வருடம் உபா­தைக்­குள்­ளா­னதை அடுத்து வீரர்கள் உபா­தைக்­குள்­ளா­வதைத் தவிர்க்கும் நோக்கில் அவுஸ்­தி­ரே­லிய டாக்டர் நிக்­கலஸ் ஸ்ப்ரெஞ்­சரின் ஒத்­து­ழைப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் பெற்­றுள்­ளது.

அடிக்கால்  மற்றும் கால் எலும்பு மற்றும் நரம்­புகள் சார்ந்த மருத்­து­வத்தில் நிபு­ணத்­துவம் பெற்ற இவர், ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் நீச்­சலில் வெள்ளிப் பதக்கம் வென்­ற­வ­ராவார். 

இலங்கை வீரர்கள் உபா­தைக்­குள்­ளா­வ­தற்கு அவர்­க­ளது அடிக்­கால்­களின் அமைப்பே காரணம் என அவர் குறிப்­பிட்டார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலை­மை­யகக் கேட்போர் கூடத்தில் நேற்­று­முன்­தினம் மாலை நடை­பெற்ற ஊடக சந்­திப்­பின்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய நிக்­கலஸ் ஸ்ப்ரெஞ்சர், ‘‘இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பலர் உபா­தைக்­குள்­ளா­வ­தற்கு அவர்கள் தட்­டை­யான அடிக்­கால்­களைக் கொண்­டி­ருப்­பதே பிர­தான காரணம். அத்­துடன் பொருத்­த­மற்ற பாத­ணி­களை அவர்கள் பயன்­ப­டுத்­து­வது மற்­றொரு காரணம்’’ என்றார்.

தொடை, கெண்­டைக்கால், கணுக்கால் ஆகிய பகு­தி­களில் ஏற்­படும் உபா­தை­களைத் தவிர்க்கும் வகையில் கிரிக்கெட் விளை­யாட்­டிற்கு உகந்த பாத­ணி­களை அவர்கள் அணி­வதே சிறப்­பான அறி­வுரை என அவர் தெரி­வித்தார்.

சில தினங்­க­ளுக்கு முன்னர் இலங்­கைக்கு வருகை தந்த நிக்­கலஸ் ஸ்ப்ரெஞ்சர் வீரர்­களின் பாதங்­களின் அள­வு­களை எடுத்து அவ­ரவர் பாதங்­க­ளுக்கு பொருத்­த­மான பாத­ணி­களை அவுஸ்­தி­ரே­லி­யாவில் தயா­ரித்து கொண்­டு­வந்­துள்ளார். பயிற்­சி­க­ளின்­போதும் கிரிக்கெட் போட்­டி­க­ளின்­போதும் இரு வகை­யான பாத­ணி­களைப் பயன்­ப­டுத்­து­வதே சிறந்­தது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இந்தப் பாத­ணி­க­ளுடன் அவர்கள் விளை­யா­டும்­போது உபா­தைகள் ஏற்­ப­டு­வதைத் தவிர்ப்­ப­தற்­கான வாய்ப்­புகள் அதிகம் என்றார் நிக்­கலஸ்.

கால்­களில் 26 எலும்­பு­களும் 102 தசை­நார்­களும் இருப்­ப­தாகத் தெரி­வித்த அவர், வேகப்­பந்­து­வீச்­சா­ளர்கள் பந்­து­வீ­சும்­போது அவர்­க­ளது உடல் பாரம் முழு­வ­தையும் ஒரு நொடிப்­பொ­ழு­துக்கு அடிக்கால் தாங்­கு­வதால் உபா­தைகள் ஏற்­ப­டு­வ­தா­கவும்; இதற்கு பொருத்­த­மான பாத­ணி­களை அணி­யா­த­மையே காரணம் எனவும் அவர் கூறினார்.

‘‘இலங்கை அணி­யினர் சம்­பியன்ஸ் கிண்ணப் போட்­டிக்கு செல்­வ­தற்கு சில தினங்­க­ளுக்கு முன்னர் வரு­கை­தந்த நிக்கி, வீரர்­களின் பாதங்­களின் அளவை எடுத்­துக்­கொண்டு அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு திரும்பிச் சென்றார். அங்கு பாதங்­களின் அள­வுக்கு ஏற்ப பொருத்­த­மான பாத­ணி­களைத் தயா­ரித்துக் கொண்டு மீண்டும் வருகை தந்­துள்ளார். இங்கு இரண்டு தினங்கள் தங்­கி­யி­ருக்கும் அவர், ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்ள 30 முதல் 35 வீரர்களைப் பரீட்சிப்பார்.

இந்தத் திட்டத்திற்கான முழுச் செலவினங்களையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது’’ ஆனால் எவ்வளவு செலவாகும் என அவரிடம் கேட்டபோது தொகையை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

(நெவில் அன்­தனி)

No comments

Powered by Blogger.