Header Ads



வெளிநாட்டு நிதியுதவி பெற, முஸ்லிம்கள் தமது நிலையங்களுக்கு தீ மூட்டுகின்றனர்

நாவலப்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான தொழிற்சாலையில்தீவிபத்து ஏற்பட்டமை குறித்து இனமுறுகலை ஏற்படுத்தும் நோக்கில்போலிக்கருத்துகளை வெளியிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் மக்களிடம் மன்னிப்புக்கேட்டு விட்டு உடன் அமைச்சுப் பதவியைத் துறக்க வேண்டும் என்று பொதுபலசேனாஅமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பொதுபலசேனா அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு அவ்வமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயேஅமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான டிலாந்த வித்தானகே இவ்வாறுவலியுறுத்தினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொழில்சாலையொன்றில் தீவிபத்து ஏற்பட்டாலும் அதன் பின்னணியில் அடிப்படைவாதிகள் இருக்கின்றனர் எனக் கூறும் யுகம் உருவாகியுள்ளது.
நாவலப்பிட்டிய சம்பவம்குறித்து அமைச்சர் ஹக்கீம் இப்படியான கருத்தையே வெளியிட்டிருந்தார். அமைச்சர் இவ்வாறு கூறிய பின்னர் இதன் பின்னணியில் பொதுபலசேனாதான் இருக்கின்றது எனஅப்பாவி முஸ்லிம் மக்கள் நினைப்பார்கள்.
எனவே, போலி தகவல்களை வெளியிட்டுகுழப்பத்தை உருவாக்குவதற்கு பொறுப்புள்ள அமைச்சுப் பதவியை வகிப்பவர் பொறுப்பற்ற விதத்தில் செயற்படக்கூடாது.எனவே, தவறுக்கு மன்னிப்புக் கோரி அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும்.முதுகெலும்பிருந்தால் அமைச்சர் இதை நிச்சயம் செய்யவேண்டும்.
கட்டாரிலுள்ள அடிப்படைவாத குழுவொன்றுடன் ஹக்கீமின் உறவினருக்குத் தொடர்பிருக்கின்றது. எனவே, அமைச்சர் ஹக்கீமுக்கு கட்டாருடன் உள்ள தொடர்பு என்ன? வெளிநாடுகளில் நிதியுதவிகளைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் தமது நிலையங்களுக்குத்தாமே தீ மூட்டிக்கொள்கின்றனர்.
அதேவேளை, முஸ்லிம் வாக்குகளை குறிவைத்து குழம்பிய குட்டைக்குள்மீன்பிடிப்பதற்கு பொது எதிரணி முயற்சிக்கின்றது. பொது எதிரணியில் எலும்புத்துண்டு திண்ணும் நாய்களும் இருக்கின்றன.
ஞானசார தேரரை சரணடையுமாறு அவர்கள்சொல்கின்றனர். எதிர்க்கட்சிப் பணியை அவர்கள் முன்னெடுப்பதில்லை என்றார்.

4 comments:

  1. Is the peraon who set fire to the Muslim owned shops in Maharagama a Muslim? Police investigations have revealed that he belongs to BBS. Shut up.....

    ReplyDelete
  2. உன்ட கத்தி பொது எதிரணி பக்கம் திரும்பும்போதே தெரிகின்றது பழு சேனாக்களை யார் இயக்குவதென்று. பொறுமையாக இரு. இந்திய நாய்களின் எலும்புத்துண்டுக்கும் டயஸ்போறாக்களின் எச்சை காசுக்கும் மாரடிக்கும் இந்த அரசாங்கம் 2020 இல் தூக்கி வீசப்படும். அப்போது தெரியும் உங்கள் எஜமானர்கள் யாரென்று

    ReplyDelete
  3. Inthe paccha madayanle pechai kanakkedukka koodathu

    ReplyDelete
  4. இவர் நினைத்துக் கொண்டுள்ளார்போல் முஸ்லீம்களின் இரத்தம்மட்டும்தான் ஆறாக ஓடுமென.பே பே பெப்ப பே.

    ReplyDelete

Powered by Blogger.