Header Ads



அம்பாறை மாவடடத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று நோன்புப் பெருநாள் தொழுகை


-யு.எல்.எம். றியாஸ்-  

அம்பாறை மாவடடத்தில் முஸ்லிம் பிரதேசங்களில்  இன்று நோன்புப் பெருநாள் தொழுகை திடல்களிலும் பள்ளிவாசல்களிலும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

புத்தாடை அணிந்து  ஆண்களும் பெண்களும் பள்ளிவாசல்கள் ,திடல்களில் பெருநாள் தொழுகைக்காக வருகை தந்திருந்தனர்.

சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்படட நோன்புப் பெருநாள் தொழுகை சம்மாந்துறை அல் - மர்ஜான்  முஸ்லீம் மகளிர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது  

பெருநாள் தொழுகையினையும் கொத்பா பிரசாங்கத்தையும்   மௌலவி எம்.எல்.எச்.எம் பஷீர்  மதனி நிகழ்த்தினார். இதன்போது விசேட துவாய் பிராத்தனையும் இடம்பெற்றது இதில்  பெருமளவிலான ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,



No comments

Powered by Blogger.