கத்தாருக்கு ஆதரவளிக்கிறேன் - எர்டோகன் அறிவிப்பு
கத்தார் நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள நாடுகளின் பட்டியலில் ஜோர்டானும், மெளரிடானியாவும் இணைந்துள்ளன.
இந்நிலையில் கத்தார் நாட்டுக்கு ஆதரவளிப்பதாக துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது எண்ணெய் வளமுடைய ஒரு நாட்டை தனிமைப்படுத்தும் கொள்கையினால் யாருக்கும் எந்த பயனில்லை என்று கூறினார்.
மேலும் நேற்று இரவு வெளிநாட்டு தூதர்களுக்கு அளிக்கப்பட்ட ரமலான் இரவு விருந்தில் பங்கேற்று பேசும் போது கத்தார் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக ஒரு "பயனுள்ள போராட்டத்தை" முன்னெடுப்பதாகவும் கூறினார்.
Post a Comment