Header Ads



'இந்த தேரர் கூடு­த­லாக துள்­ளினால் குண்டைக் கட்­டிக்­கொண்டு, தற்­கொலை தாக்­குதல் நடத்­துவேன்' - அசாத் சாலிக்கு எதி­ராக விசா­ர­ணை­ ஆரம்பம்

பெளத்­தர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையே கல­கத்தை தூண்டும் வித­மாக கருத்­துக்­களை வெளி­யிட்டார் எனும் குற்றச் சாட்டு தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்­பி­னரும் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவ­ரு­மான அசாத் சாலிக்கு எதி­ராக திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

இது தொடர்பில்  கொழும்பு பிர­தான நீதி­வா­னுக்கு திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஜனக குமார பீ அறிக்கை ஒன்­றினை தககல் செய்­துள்ளார்.

அதன்­படி அசாத் சாலிக்கு எதி­ரான விசா­ர­ணைகள் தொடர்பில், 2016 ஜூலை 2 ஆம் திகதி, அவரால் அவ­ரது வீட்டில் நடாத்­தப்பட்­ட­தாக கூறப்­படும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு குறித்த செம்­மை­ப­டுத்­தப்பட்ட, செம்­மைப்­ப­டுத்­தப்­ப­டாத வீடியோ காட்­சி­கள் தனியார் தொலைக்­காட்­சிகள் மூன்­றிடம் இருந்து பெற்­றுக்­கொள்ள நீதி­மன்றில் அனு­மதி பெறப்­பட்­டுள்­ளது.

கடந்த 2016  ஜூலை 17 ஆம் திகதி பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு அசாத் சாலி ஊட­கங்­க­ளுக்கு அளித்­துள்ள கருத்­துக்கள் பெளத்த மதத்­தையும் அதன் தேரர்­க­ளையும் அச்­சு­றுத்தும் வண்ணம் அமைந்­துள்­ள­தாக கூறி  விதா­ர­ண­லாகே துஷார சாலிய ரண­வன எனும் நபர் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பாடு செய்­தி­ருந்தார்.

இது தொடர்பில் விசா­ர­ணைகள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தரவால் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரி­விடம் ஒப்­ப­டைக்­கப்பட்­டுள்ள நிலை­யி­லேயே நேற்று முன் தினம் சிறப்பு பீ அறிக்கை ஒன்­றினை தாக்கல் செய்து அசாத் சாலிக்கு எதி­ரான விசா­ர­ணைகள் தொடர்பில் சாட்­சி­களைப் பெற்­றுக்­கொள்ள அனு­மதி பெறப்­பட்­டுள்­ளது.

' இந்த தேரர் கூடு­த­லாக துள்­ளினால் குண்டைக் கட்­டிக்­கொண்டு தற்­கொலை தாக்­குதல் நடத்­துவேன்' என அசாத் சாலி ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் குறிப்­பிட்­ட­தா­கவும் முறைப்­பாட்­டாளர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இந் நிலையிலேயே இது தொடர்பில் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 MFM.Fazeer

3 comments:

  1. அப்பாவி முஸ்லீம் மக்களை தூண்டிவிட்டு கலவரத்துக்கு வழிகோலி தனது உள்நாட்டு, வெளிநாட்டு கொந்தராத்து எஜமானர்களின் தேவையை நிறைவு செய்ய எண்ணியே இவ்வாறு குண்டு கட்டிப்பாய்வதாக சொல்லியிருப்பாரோ? ஏனெனில் உண்மையாக அவ்வாறு செய்யும் நபரா இவர்?

    ReplyDelete
  2. அரை மணி நேரத்துக்குள் நாட்டில் உள்ள முஸ்லீம்களை சிறிவர்கள் பெரியவர்கள் உட்பட கொல்லுவோம் என்று பகீரங்கமாக கூறியவனை யாரும் காணவில்லை,தற்போது நாட்டில் நடக்கும் கைதுகள் முஸ்லீம்களின் குரவளையை நசுக்கும் திட்டம்தான்,

    ReplyDelete
  3. Asath Sally just joking

    ReplyDelete

Powered by Blogger.