Header Ads



இன்றைய இப்தாருக்குப் போகலாமா..?

-Mohamed Naushad-

முன்னாள் ஜனாதிபதி இன்றும் இந்நாள் ஜனாதிபதி 20 ம் திகதியும் முஸ்லிம்களுக்கு இப்தார் விருந்து கொடுக்கப் அழைப்பு விடுத்துள்ளனர். வழமைபோல் இதற்கு செல்லலாமா கூடாதா என்று முஸ்லிம்கள் பிளவு பட்டுள்ளனர்.

இதில் பெரிதாக யோசிப்பதற்கோ விவாதிப்பதற்கோ எதுவும் இல்லை. சமுகத்தை பற்றி எந்த அக்கறையும் இல்லாமல், குறைந்த பட்சம பகிஷ்கரிப்புக்கான ஒரு வாய்ப்பை கூட பயன்படுத்தாமல் அதற்கான துணிவு இல்லாமல் அங்கே கிடைக்கும் உணவும் கஞ்சியும் ஹராம் ஹலாலா என்ற அக்கறை இல்லாமல்  இதுதான் சமூகத்துக்கு கிடைக்கின்ற கெளரவம். 

முன்னாள் இந்நாள் தலைவர்களின் அழைப்பை புறக்கணிக்க முடியுமா? வருடத்துக்கு ஒரு முறை இதற்காகவே வைத்திருக்கும் கோட்டு சூட்டை தூசு தட்ட வேண்டாமா எனக் கருதும் நோன்பு காலத்தில் இதற்காகவே அலையும் இராப்பிச்சை கூட்டம் செல்லலாம். மற்றவர்கள் தவிர்ந்து கொள்ள லாம்.

No comments

Powered by Blogger.