ரணில் வந்திறங்கியதும், பேசப்பட்ட முஸ்லிம் விவகாரம், ஆரம்பித்துவைத்த பொன்சேக்கா
சிகிச்சை மற்றும் இராஜதந்திர விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்காவுக்கு சென்று நேற்றுமுன்தினம் நாடு திரும்பிய பிரதமரிடம் அண்மைக்காலமாக இலங்கையில் மோசமடைந்துள்ள இனவாத செயற்பாடுகள் குறித்து ஐ.தே.க. எம்.பி.க்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நேற்றுமுன்தினம் மாலை அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வரவேற்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விமான நிலையத்தின் விஷேட அதிதிகளுக்கான வெளியேறும் பகுதிக்கு சென்றிருந்தனர்.
பிரதமர் வந்தடைந்ததும் நாட்டு நிலைமைகள் குறித்து அங்கு கதையாடல் இடம்பெற்றது. இதன்போது, அமைச்சர் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா, தற்போது நாட்டில் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமரிடம் வினவினார்.
அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் இதன்போது, தற்போது இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான கெடுபிடிகள் குறித்து பிரதமரிடம் விபரித்துள்ளனர். இதுகுறித்து கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி ஆராய்வதாக பிரதமர் விமான நிலையத்தில் தெரிவித்ததுடன் அங்கு பொலிஸ்மா அதிபருடனும் கலந்துரையாடினார்.
நம்பிட்டோம்!!!???? முதலில் நாம் இந்த எச்சைப்பொறுக்கிகளைக் தூக்கி எரியனும்
ReplyDeleteRanil and his team worried about their days........
ReplyDelete