Header Ads



சவூதி அரேபிய குற்றவியல் விசாரணை முறையில் சீர்திருத்தங்கள்

சவூதி அரேபியாவில் நீதி விசாரணை முறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு அந்த நாட்டு அரசர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அந்த உத்தரவின்படி, குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட நீதித்துறை விவகாரங்களை மேற்பார்வையிடும் உரிமை, பட்டத்து அரசரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரங்களை மேற்பார்வையிட புதிதாக நியமிக்கப்படும் அமைப்பு, நேரடியாக அரசரிடமே இதுகுறித்த விவரங்களைத் தெரிவிக்கும். மேலும், குற்றவியல் வழக்கு விசாரணைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு நீதித் துறைக்குப் பதிலாக உள்துறைக்கு வழங்கப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.