Header Ads



சிறுமியர் துஸ்பிரயோகம், ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

கடந்த சில வாரங்களுக்கு முன் தோப்பூர் பெருவெளி கிராம பாடசாலைக்கு அறநெறி பாடத்திற்காக சென்ற மூன்று சிறுமிகள் மீது இனம் தெரியாதவர்களால் துஸ்ப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு பின்னார் குறித்த பாடசாலையில் கட்டிட வேளைகளில் ஈடுபட்ட இருவர்
பிரதேச மக்களால் கட்டிவைக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிசாரால் மீற்கப்பட்டு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து 
மேலும் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்
பின்னர் கடந்த 06 (செவ்வாய்) நீதி மன்றில் ஆஜர் படுத்தப்பட்டு சிறுமியர்களால் அடையாளம் காண அடையாள அணிவகுப்பு செய்யப்பட்டு ஐவரும் சிறுமியர்களால் இல்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து பலர் முஸ்லிம் சமூகம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வந்ததையும் அறியமுடிகிறது பிரதேச தமிழ் மக்கள் தமக்கு நியாயம் கோரி பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தி வந்த நிலையில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த இனத்தை சார்ந்தவராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்ற நோக்கிலல்லாமல் முஸ்லிம் சமூகத்தை கொச்சைப்படுத்தும் இனவாதிகள் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இனமுருகளை ஏற்படுத்துவர்களை தண்டிக்கவேண்டும் என்பதோடு குற்றமற்ற ஐவரையும் விடுவிக்கவேண்டும் எனக்கோரி 07 (புதன்) தோப்பூர் மற்றும் மூதூர் பிரதேசங்களில் அமைதிப்பேரணி ஒன்றை ஏற்பாடு செய்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்,மூதூர் பிரதேச செயலாளர் மற்றும் தோப்பூர் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்
பின்னர் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் காலை 10 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்ட இரு சமூகங்களை சார்ந்த முக்கியஸ்தர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி,மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர்,ஜனார்த்தனன் மற்றும் நாகேஸ்வ்ரன்,மூதூர் மற்றும் வெருகல் பிரதேச செயலாளர்,அரசாங்க அதிபர்,கல்வி அமைச்சின் செயலாளர்,மாகாண கல்வி பணிப்பாளர்,மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்,பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்,மூதூர்,தோப்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்,மூதூர் வலைய கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்
ஆளுநர் உரையாற்றுகையில் குற்றத்தை புரிந்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதுடன் விசேடமாக பொலிஸாருக்கு சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவு இட்டிருப்பதாகவும் அவற்றுக்கான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் கூறிய அவர் ஒரு தனி நபர் செய்த குற்றத்திற்காக ஒரு சமூகத்தை சார்ந்தவர்களை விமர்சிப்பது இனமுருகளை ஏற்படுத்துவதுடன் 
பாடசாலை மாணவர்களை பயன்படுத்தி போராட்டங்களை நடாத்துவது பெற்றார்களே தமது பிள்ளைகளின் கல்வியை சீர்குலைக்கின்ற செயற்பாடாகும் அதோடு திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவத்திற்கு மட்டக்களப்பு மற்றும் ஏனைய பகுதிகளில் போராட்டங்களை நடாத்துவது பொருத்தமற்ற செயல் அவற்றினூடாக இனமுறைகளை ஏற்படுத்தும் ஒரு முறையாகவே தெரிகிறது இதனூடாக இன்று தோப்பூர் மற்றும் மூதூர் பிரதேசங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன இரண்டு சமூகமும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தால் உண்மையான குற்றவாளியை கைது செய்வதறக்கான வழிவகைகள் கை நழுவிப்போகலாம் அவற்றை கை விடும்படி இரு சமூகத்தை சார்ந்தவர்களிடமும் கேட்டுக்கொண்டார்
பாலியல் துஸ்பிரயோகம் செய்த பகுதியில் இருந்த குற்றவாளியின் இந்திரியம் டி என் ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எதிர்வரும் 12(திங்கள்) க்கு முன்னர் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் உண்மையான குற்றவாளி யார் என்பதை இனம் கண்டு அவர்களுக்கான தண்டனை வழங்கப்படும் எனவும் குறிப்பாக இரு சமூகத்தை சார்ந்தவர்கள் குற்றவாளியை கண்டு பிடிக்க உதவ வேண்டும் எனவும் மாவட்ட பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டார்
மேலும் தமிழ் சமூகத்தை சார்ந்தவர்கள் தமக்கான நியாயம் கிடைக்கவேண்டும் எனவும் முஸ்லீம் சமூகத்தை சார்ந்தவர்கள் நிரபராதிகள் தண்டிக்கபடக்கூடாது என்பதுடன் குற்றம் செய்தவர்கள் மாத்திரமே தண்டிக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்
உரையாற்றிய கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் எனவும்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தமிழ் முஸ்லீம் உறவை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அவற்றில் இருந்து இரு சமூகமும் அவதானமாக இருப்பதுடன் கடந்த மூன்று தசாப்த யுத்தம் காவுகொள்ளப்பட்டு மீண்ட நிலையில் நாம் ஒற்றுமையுடன் செயல் பட இரு சமூகத்தவர்களும் செய்யப்படவேண்டும் எனவும் உண்மையில் குற்றவாளி எந்த இனமாக இருக்கட்டும் அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்
இறுதியாக இரு சமூகத்தை சார்ந்த பிரதி நிதிகள் தாம் எவ்வித போராட்டங்களையும் வீதிகளின் தொடராமல் குற்றவாளியை பொலிசார் கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் ஆளுநர் கூறியதுடன் இரு சமூகங்களுக்குமிடையிலான நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு கூட்டம் முடிவுற்றது

No comments

Powered by Blogger.