Header Ads



மரண அறிவித்தல்

இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன்..!!

ஓய்வுபெற்ற அதிபர் தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஐ. தைப்தீன் அவர்கள் கண்டி வைத்தியசாலையில் காலமானார். 

இவர் ஆரம்பகாலத்தில் மர்ஹூம் தலைவர் அஷ்ரப் அவர்களுடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டதோடு 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் அனுராதபுர மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டிருந்தார்.

வடமத்திய மாகாணத்தின் தமிழ் மொழிமூல முதல் தர பட்டதாரியான இவர், மாத்தளை சாஹிரா தேசிய பாடசாலை,நாவலபிட்டி சென் மேரிஸ் பாடசாலை உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலை, அக்குரணை அஸ்ஹர் தேசிய பாடசாலை, அ/உந்துருவ கட்டுக்  கொளியாவை முஸ்லிம் வித்தியாலயம், அ/கணேஸ்வல்பொல மு.ம.வி, ஆகிய பாடசாலைகளின் முன்னாள் அதிபராவார். 

மேலும் இவர் கெக்கிராவ கஹட்டஸ்திலிய தொலைக்கல்வி போதனா ஆசிரியராகவும், வடமத்திய மாகான உயர்தர புவியியல் ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.

தகவல் மகன், T.M. ஸர்டீன் மாத்தளை 0777701992

No comments

Powered by Blogger.