Header Ads



ஞானசாரரர் கைது, தாமதிக்கப்படுவது ஏன்..?

-எஸ்.றிபான்-

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் பொதுபல சேனாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை கைது செய்­வ­தற்கு பொலிஸார் வலை விரித்துத் தேடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர் தலை­ம­றை­வா­கி­யுள்ளார். அவ­ரது உயி­ருக்கு அச்­சு­றுத்தல் இருப்­ப­தா­கவும், அத­னால்தான் அவர் ஒளிந்­துள்­ள­தா­கவும் பொதுபல சேனா தெரி­வித்­துள்­ளது. இதேவேளை, ஞான­சார தேரர் ஊட­கங்­க­ளுக்கு அறிக்­கை ­விடுத்­துள்ளார். மேலும், அவர் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்­கிற்கு ஆஜ­ரா­காதும் உள்ளார்.

இந்த வழக்கு 31.05.2017 புதன்­கி­ழமை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது ஞான­சார தேரர் சமு­க­ம­ளிக்­க­வில்லை. அவர் சுக­வீனம் கார­ண­மாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார் என்று அவ­ரது சட்­டத்­த­ரணி நீதி­மன்­றத்தில் தெரி­வித்­துள்ளார். இவ்­வாறு ஞானசார தேரர் பற்­றிய முரண்­பா­டான கருத்­துக்கள் வந்து கொண்­டி­ருக்­கின்­றன.

இவ்­வாறு ஞான­சார தேரர் பற்றி தெரி­விக்­கப்­ப­டு­கின்ற கருத்­துக்­களை பார்க்­கின்ற போது அவர் திட்­ட­மி­டப்­பட்ட வகையில் பாது­காக்­கப்­ப­டு­கின்றார் என்­பது தெளி­வா­கின்­றது. பொலி­ஸாரின் கட­மைக்கு இடை­யூறு விளை­வித்­தமை, இனங்­க­ளுக்­கி­டையே ஒற்­று­மையை சீர்­கு­லைக்க முயற்சி செய்­தமை, வாக்கு மூலம் பெறு­வ­தற்­காக பொலி­ஸா­ரினால் விடுக்­கப்­பட்ட அழைப்பை புறக்­க­ணித்­தமை என பல குற்­றச்­சாட்­டுக்­களின் பேரி­லேயே ஞான­சார தேரரை கைது செய்­வ­தற்கு பொலிஸார் தேடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

கடந்த 25.05.2017 திகதி பொலிஸார் முன்வைத்த இக்­குற்­றச்­சாட்­டுக்­களின் பின்னர் ஞான­சார தேரர் தலை­ம­றை­வா­கி­யுள்ளார். இவரைக் கைது செய்­வ­தற்­காக விசே­ட­மாக நான்கு பொலிஸ் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன. இக்­குழு தேடுதல் வேட்­டையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கி­ன்­றன. ஆயினும், இப்­பத்தி எழுதும் வரையில் அவர் கைது செய்­யப்­ப­ட­வில்லை.

இலங்கை புல­னாய்வுப் பிரிவு மிகவும் சக்தி வாய்ந்­த­தாகும். விடு­தலைப் புலி­களின் ஆதிக்கம் மேலோங்­கி­யி­ருந்த காலத்தில் விடு­தலைப் புலிகள்  தலை­வர்­களின் நட­மாட்­டங்­க­ளையும், திட்­டங்­க­ளையும் துல்லி­ய­மாக இலங்கை புல­னாய்வுப் பிரிவு தெரிந்து வைத்­தி­ருந்­தது.

இத­னால்தான், அவ்­வி­யக்­கத்தை முற்­றாக அழித்து விட முடிந்­துள்­ளது. விடு­த­லைப்­பு­லி­களின் கட்­டுப்­பாட்டுப் பகு­தி­களில் நடந்­த­வற்­றையே அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்ற புல­னாய்வுப் பிரி­வினால் பொதுபல சேனாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மறைந்­துள்ள இடத்­தினை அறிந்து கொள்­வது என்­பது கடி­ன­மான காரி­ய­மாக இருக்­காது. ஆதலால், ஞான­சார தேரரை கைது செய்­வதில் அதி­காரம் கொண்ட மறைமுகக் கரங்­களின் தலை­யீ­டுகள் இருக்­க­லா­மென்று சந்­தே­கிக்க வேண்­டி­யுள்­ளது. 

ஞான­சார தேரரை கைது செய்­வ­தற்கு பொலிஸார் தேடிக் கொண்­டி­ருக்கும் அதேவேளை, அவ­ரது உயி­ருக்கு அச்­சு­றுத்தல் இருப்­ப­தா­கவும் பொலிஸார் கொழும்பு நீதிவான் மன்­றத்தில் தெரி­வித்­துள்­ளனர். ஞான­சா­ரரை கைது செய்து சிறையில் அடைக்கும் பட்­சத்தில் அவரை சிறையில் வைத்தே கொலை செய்­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தாக பொதுபல சேனாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே பொலிஸில் செய்த முறைப்­பாட்­டிற்கு அமை­வா­கவே ஒழுங்­க­மைக்­கப்­பட்ட குற்­றங்கள் பிரிவு பொலிஸார் நீதி­மன்­றத்தில் ஞான­சார தேரரின் உயி­ருக்கு அச்­சு­றுத்தல் இருப்­ப­தாகத் தெரி­வித்­துள்­ளனர்.

கைது செய்­யப்­ப­டு­கின்­ற­வர்­களை பாது­காக்க வேண்­டிய பொறுப்பு பொலி­ஸா­ருக்கு இருக்­கின்­றது. கைது செய்­யப்­ப­டு­கின்­ற­வ­ருக்கு உயிர் அச்­சு­றுத்தல் உள்­ள­தென்றால் அதற்­கேற்­ற­வாறு விசேட பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். ஞான­சார தேரர் கைது செய்­யப்­படும் பட்­சத்தில் அவ­ரது உயி­ருக்கு ஆபத்­துள்­ள­தென்று தெரி­விக்­கப்­பட்­டுள்ள முறைப்­பாட்­டா­ள­ருக்கு ஞான­சார தேரரின் பாது­காப்­புக்­கான உத்­த­ர­வா­தத்­தினை வழங்க வேண்­டி­யதும் பொலி­ஸாரின் பொறுப்­பாகும். 

2015 ஆம் ஆண்டு மேற்­படி விடயம் தொடர்­பாக கைதி ஒருவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு எழு­திய கடி­த­மொன்றில் இதுபற்றி தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் நீதி­மன்­றத்­திற்கு வழங்­கிய அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஞான­சார தேரர் கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­படும் பட்­சத்தில் கொலை செய்ய சதி த்திட்டம் தீட்­டப்­பட்­டுள்­ள­தென்று கடிதம் எழு­தி­யுள்ள குறிப்­பிட்ட கைதிக்கு சதித்­திட்டம் பற்றி தெரிந்­துள்­ளது. அத­னால்தான் அவர் ஜனா­தி­ப­திக்கு கடிதம் எழு­தி­யுள்ளார்.

மேலும், ஞான­சார தேரர் தமது உயி­ருக்கு அச்­சு­றுத்தல் உள்­ள­மை­யால்தான் தலை­ம­றை­வா­கி­யுள்ளார் என்று அந்த அமைப்­பி­னரே தெரி­விக்­கின்­றார்கள். அப்­ப­டி­யாயின் அவர் எங்­குள்ளார் என்­பது அந்த அமைப்­பி­ன­ருக்கும் தெரியும் என்­பதில் சந்­தேகம் கொள்ள முடி­யா­தென்று நினைக்­கின்றேன்.

மேலும், தலை­ம­றை­வா­கி­யுள்ள ஞான­சார தேரர் ஊட­கங்­க­ளுக்கு அறிக்கை வழங்­கி­யுள்ளார். இன்­றைய நவீன யுகத்தில் ஒரு சிறு தக­வலை வைத்துக் கொண்டே அவர் எங்­குள்ளார் என்று கண்டு பிடிக்க முடியும். ஆனால், ஞான­சார தேரர் ஊட­கங்­க­ளுக்கு வெள்ள அனர்த்தம் பற்­றி­ய­தொரு அறிக்­கையை வழங்­கி­யுள்ளார். இந்த அறிக்கை ஒன்றே போதும் அவர் மறைந்­துள்ள இடத்­தினை கண்டுபிடிப்­ப­தற்கு. ஆனால், எதுவும் நடை­பெ­ற­வில்லை.

நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு மீண்டும் 31.05.2017 அன்று விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது அவர் சுகவீனம் கார­ண­மாக சிகிச்சை பெற்று வரு­கின்றார் என்று ஞான­சார தேரரின் சட்­டத்­த­ரணி தெரி­வித்­துள்ளார். அமைச்சர் ஒரு­வ­ருக்கு எதி­ராக வழக்­கொன்றின் போது குறிப்­பிட்ட அமைச்சர் சுக­வீ­னத்தைக் காரணம் காட்டி நீதி­மன்­றத்­திற்கு சமுக­ம­ளிக்­க­வில்லை. ஆயினும், அவரை வைத்­தி­ய­சா­லையில் வைத்தே பொலிஸார் கைது செய்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்து.

எனவே, இவற்றின் அடிப்­ப­டையில் ஞான­சார தேரர் திட்­ட­மி­டப்­பட்ட வகையில் பாது­காக்­கப்­ப­டு­கின்றார் என்று தெரி­கின்­றது.

3 comments:

  1. தயவு செய்து முஸ்லீம் அனைவரும் தங்களின் துஆவில் நமது சமூகத்தின் பாதுகாப்பையும் சேர்த்துக்கொள்ளவும், முஸ்லிம்களின் ஆயுதம் துஆதான்!

    ReplyDelete
  2. Peace Lankan ,

    Palestineththil,Syriyavil,Iraqil,Afganil ketkaaza
    Duawagap parththu kelungal !
    UNNAICH CHOLLIK KUTRAMILLAI , ENNAICH CHOLLIK
    KUTRAMILLAI ! KAALAM CHEIZA KOALAMADI KADAVUL
    SEIZA KUTRAMADI KADAVUL SEIZA KUTRAMADI .

    ReplyDelete

Powered by Blogger.