Header Ads



மரண தண்டனைக் கைதிகளுக்கு ஆங்கிலம் படிக்க ஆர்வம், ஆலேசகராக மரண தண்டனைப்பெற்ற வைத்தியர்

தங்களுக்கு ஆங்கில அறிவு பெற்றுக் கொள்ள விருப்பம் உள்ளமையினால் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு வெலிக்கடை சிறைச்சாலையின் மரண தண்டனை கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரண தண்டனை கைதிகளின் கோரிக்கைக்கமைய அவர்களுக்காக ஆங்கில பாடநெறியை ஆரம்பித்துள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட வைத்தியர் உட்பட சிறைக்கைதிகள் நான்கு பேர் இந்த பாடநெறியின் ஆலோசகர்களாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாடநெறிக்கு அவசியமான புத்தகம் பல்வேறு நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் இவ்வாறான பாடநெறி ஒன்று வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள போதிலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்காக நடத்தப்படுகின்ற முதலாவது படநெறி இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.