Header Ads



ஞானசாரர் இஸ்லாத்தை ஏற்றாலும், இனவாதம் ஒழியாது..!

-அஹமட் புர்க்கான்-

இலங்கை முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக ஈடுபட்டுவரும் கலகொட அத்தே ஞானசார தேரர் புனித இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினாலும் இலங்கையில் வேரூன்றி காணப்படும் இனவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவது கடினமான காரியமாகும்.

இனவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்து முஸ்லிம்களுடைய பாதுகாப்பு, இருப்பு என்பன போன்ற விடயங்களை நிரந்தரமாக்கிக் கொள்ள முஸ்லிம் சமூகம் முன்வராத வரையில் இந்த நிலை தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

குறுகிய காலத்திற்குள் முஸ்லிம் அரசியலில் கால்பதிக்க வேண்டும் என சில அரசியல்வாதிகள் கட்சிகளை ஆரம்பித்து முஸ்லிம்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்து சிங்கள,தமிழ் முஸ்லிம் என பாகுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்த சமூகங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தி தங்களுடைய அரசியல் அடையாளத்தை பெற முயற்சிப்பவர்களுக்கு பின்னால் தொடர்ந்து முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் பயணித்தால் பயணத்தின் இறுதியில் மரணக்குழியில் விழும் நிலை ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்த அதிகார நோய்பிடித்தவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் மாத்திரம் அல்லாது தமிழ் சிங்கள மக்கள் மத்தியிலும் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை, என்றாலும் கடந்த காலங்களில் தமிழ் சமூகம் பிரிந்து நின்றதன் பாரதூரமான விளைவுகள் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு பாடமாகவும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் சிங்கள சமூகத்திற்கு படிப்பினையாகவும் அமைந்திருக்கிறது.

சகவாழ்வு, சமாதானம் என்பவற்றை நாட்டின் மூவின மக்கள் நேசித்தாலும் அதை இனவாத கட்சிகளின் தலைமைகள் விரும்பாதவரையில், அந்த கட்சிகளை சமூகங்கள் நிராகரிக்காத வரையில் நிரந்தர சமாதானம் என்பது கனவு வார்த்தைதான் என்பதை அனைத்து சமூகங்களும் நினைவில் கொள்ளவேண்டும்.

பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் இந்நாட்டின் எதிர்கட்சி அரசியல் அர்த்தமற்று போனது என்பதே உண்மையாகும், பிச்சைக்காரனுக்கு புண் எவ்வாறானதொரு மூலதனமோ அதே போல் அரசியல்வாதிகளுக்கு சமூகங்களுக்கு இடையிலான பிளவு அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.
எப்போதாவது ஆட்சி மாறும் என்ற கனவுகளுடன் இருந்த எதிர்கட்சி அரசியல் தலைவர்களில் ஒருவரான, தற்போதைய பிரதமர் அவர்களின் வழமையான சிந்தனையே ஞானசார தேரர் என்ற கடும் போக்குவாதியை உருவாக்கியது, அதன் மூலமாக சிங்கள பெரும்பான்மை மக்களை தூண்டிவிட்டு சிறுபான்மை இனத்தை சீண்டுவதனால்  இன ஐக்கியத்தை கேள்விக்குற்படுத்தி ஆட்சியை பிடிக்கலாம் என்பதும் அதற்காக துணைபோனவர்கள் அவருடைய அரசாங்கத்தில் தற்சமயம் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பதையும் முஸ்லிம் சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

தங்களுடைய அரசியல் அந்தஸ்தை இழக்கவிடாமல் பாதுகாக்கும் ஞானசார தேரரையும், அவருடைய அட்டகாசங்கள் அனைத்துக்கும் அனுமதி வழங்கி பாதுகாப்பவர்கள் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்று காத்துக் கிடப்பது முட்டாள்தனமாகும்.

ஞானசார தேரர் அவர்கள் தாமாகவே முன்வந்து  புனித இஸ்லாத்தை ஏற்றாலும் தற்போதைய அதே சவால்களை ஓராயிரம்ஞானசாராக்களை உருவாக்கவும் அவர்களை வைத்து இனவாதத்தை தொடரும் சிந்தனை கொண்ட அரசியல் தலைவராக ஐ.தே கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க அவர்கள் இருக்கிறார். 

ரணில் விக்கிரமசிங்க என்பவர் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக, அல்லது எதிர்கட்சி தலைவராக அல்லது ஆட்சியாளராக, அவர் எந்த தரப்பில் இருந்தாலும் சிங்கள தமிழ் முஸ்லிம் ஒற்றுமை இலங்கையில் மலராது என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர் அரசியல் அடையாளத்துடன் இருக்கும் வரையில் இந்த நாட்டில் இனவாதம் என்ற வாசகம், இலங்கை அரசியலில் நீடித்துக் கொண்டே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. அப்படிப்பட்ட ஒருவருடைய நிகழ்ச்சி நிரல்களுக்கு விலைபோன சிறுபான்மை இனவாத கட்சிகளின் தலைவர்கள் தங்களுடைய அரசியல் இருப்பே வேண்டி அவருடைய வாடி வீட்டில் குடியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் யார் என்பதை முஸ்லிம் சமூகம் அடையாளம் கண்டு அவர்களை அரசியலில் இருந்து தூரப்படுத்த வேண்டும்.

அப்போதுதான் முஸ்லிம்கள் வேண்டி நிற்கும் சகவாழ்வு சமாதானம் நீடிக்கும் 

24 comments:

  1. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஒரு இனக் குழுமம் பெரும்பான்மையினரிலும் பார்க்க கூடிய வரப்பிரசாதங்களை அனுபவித்துவந்த நிலையில் நாடு சுதந்திரம் பெறுகையில் சேர் பட்டம் பெற்ற சிலரால் நியாயமற்ற 50க்கு50 கோரிக்கை விடுக்கப்பட்டதும் அது பெரும்பான்மையினரால் மறுக்கப்பட்டது. இதன் தொடராகவே பிரிவினைவாதம், பயங்கரவாதம் என்பன உருவாகி இவ் அழகியதீவை அலங்கோலமாக்கியது.
    இதிலிருந்து படிப்பினை பெறுவதற்கான கால அவகாசத்திற்கு மேலாக அன்றைய அரசியல் மற்றும் பயங்கரவாதத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களை கனகச்சிதமாக மர்ஹூம் அஷ்ரப் பயன்படுத்தியதன் விளைவே முஸ்லிம்களுக்குத் தனிக்கட்சி என்பதாக அமைந்தது.
    மேலும் தேசிய சிங்கள கட்சிகளிலும் தமிழரசுக் கட்சியிலும் முஸ்லிம்கள் தொடர்பில் ஏற்பட்ட வெற்றிடமும் அகன்ற இடைவெளியும் கூட இதற்கு கால்கோலியது எனலாம்.
    இன்றைய்நிலையில், ரனில் சாரதியாக இருக்கும் வரை UNPஎனும் வாகனத்தில் ஏறமாட்டேன் என்ற அஷ்ரப் அவர்களின் சபதத்தை தற்போதைய தலைமை மீறிய நிலையே முஸ்லிம்களின் அவல நிலைக்கான காரணமுமாகும்.
    தற்போதைய தலைமைக்கு பேரம்பேசல் (சுயநலம்சார்) அரசியல்பற்றிய ஞானம் மட்டுமே உள்ளதாகவும் சமூக உரிமைசார் அரசியலின் அரிச்சுவடிகூட தெரியாத்தோடு மற்றவர்களையும் கொத்தித்துரத்திவிட்டு தான்மட்டும் சௌக்கியமாயிருக்க அதிகாரங்களையும் தன்னிலைப்படுத்தி ஒய்யாரமாக குந்தியிருப்பதும் சாபக்கேடே!

    ReplyDelete
    Replies
    1. Mohamad lafir
      என்பவர் சரியன வரலாற்று அறிவு அற்றவர்.மாறாக காள்புணர்ச்சியின் வடிகாலாகவே இவர் கருத்துக்கள் உள்ளது.
      இலங்கையில் பிரிவினை முதலீல் தமிழர்தான் கோரியாதாக கூறமூட்படுகிறார்.
      முதலில் கண்டிசிங்களவரே பிரிவினை அதிகாரபரவலாக்கம் என்பவற்றை கோரினர்.கரைசிங்களவர் வேறு கண்டி உயர் சிங்களவர் வேறு என்று கூறி அன்று சமஷ்டியை கோரரினர்.இதன்பொது தமிழர் பிரதேசங்களை ஒன்றிணைத்து (தெமுழுரட்டே)தமிழ் சமஷ்டீ தருவதாகவும் கூறியபோதும் அதனை மறுத்து ஒற்றை ஆட்சியில் இலங்கையை கட்டி யேழுப்ப முனைந்தவர்கள் தமிழர்கள்.
      இலங்கை சுதந்திரம்அடைந்ததும் சிறுபான்மைஇனத்தை ஒடுக்கும் சமிஞ்ஞைகள் தொடங்கியது.இந்தியவம்சாவளி தமிழர் குடியுரிமை பறிப்பு.சிங்களமட்டும் என விளையாட்டை ஆரம்பித்தனர்.
      Mohamed lafirஎன்பர் குறிப்பிடதை போல 50:50இலங்கை தமிழக்கு மட்டும் கேட்க படவில்லை.மாறாக அன்று 36%சிறுபான்மை இனத்தவர் இலங்கையில் இருந்தனர்(இந்திய தமிழர் வெளியேற்றபட்டதன் முன்.9%,இலங்கைதமிழர் 13%.,முஸ்லீம் 8% சிங்கள கிறித்துவர் மற்றும் ஆங்கிலேயர் உட்பட சிறுபன்மை 6%)இந்த 36%சிறுபான்மை இனர் தேசியஅரசியலில் பாதுகாப்பை பெற 50%கோரப்பட்து.
      இந்தநாட்டில் தமிழ்மொழி அரச அந்தஸ்திலிருந்து நீக்கபட்ட போது முஸ்லீம்கள் சிங்களத்தை ஏற்க ஒப்புகொண்டனர்.(தெற்கிலும் கிழகிலும் முஸ்லீம் அமைப்புகளும் பள்ளிவாசல் களும் சிங்கள சட்டமூலத்தை ஏளற்பதாக அறிவித்தன) தமிழர் போரட்டம் மட்டுமே தமிழை மீட்டெடுத்தது.சிங்களவரின் கலடியீல் குவிந்திருந்த அதிகாரங்களில் சிலவற்றை ஏனம் மாகணங்களுக்கு கொண்டுவந்தது தமிழரே.இப்படீ தமிழரின் போராட்டங்கள் அனைத்து சிறுபான்மையினருக்கானவை.அவற்றை அனுபவிக்க அனைத்து சிறுபான்மை இனருக்கும் உரிமை உண்டு.ஆனல் முஸ்லீம்கள் தமிழர் போராட்டதிற்கு உதவியது மிக குறைவு.

      Delete
    2. ஆங்கிலாயர்காலத்தில் தமிழர்அதிக வரப்பிரசாதம் அனுபவத்ததாக கூறுவது பொய்.அன்று கல்வியில் சிறந்து விளங்கியதால் உயர்பதவிகளில் ஆங்கீலம்கற்ற தமிழர்கள் இருந்தனர்.அரசியலல்நிர்ணயசபை இனவீதாசரர்த்தையும் பல்லினதன்மையை யும் பிரதிபலீத்தது.

      Delete
    3. இன்று முஸ்லீம் அமைச்சர்கள் தலைமைவகிக்கும் மம
      வவட்ட அபிவிரித்துகுழுக்கள்.(தமிழர் தீர்வாக முன்வைக்கபட்டு நிராகரிக்க பட்டு மீண்டும் கொண்டுவரபட்டது).தமிழருடன் வழமுடியாதென்று உருவாக்கிய தனிபிரதேச சபைகள்(பிரேமதாசவால் மாகாணசபையைபலவீனபடுத்த உருவாக்க பட்டது)..கோட்சூட் முதல்வர் ஆழும் மாகாணசபை முறைமை.இன்று அனுபவிக்கும் தமிழ் ஆட்சிமொழீ உரிமை எல்லாம் நீர்வசைபாடிய தமிழர் களால் அவர்களின் போராட்டங்களால் உருவானவையே..மன்னிக்கனும் உங்பக பாஷைல.சொன்னா பயங்கரவாதிகளால் உருவானவை.

      Delete
    4. 1505களில் போத்துக்கீசரின் வருகையைத் தொடர்ந்து கரையோரங்கள் வீழ்ச்சியடைந்த நிலமையில் கண்டி சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்ட புரட்சியையும் பிரகடனங்களையும் திரிவுபடுத்தி வரலாற்றுச்சிதைவினை ஏற்படித்தி தங்களுக்கு சாதகமானதாக கூறமுற்படும் குமரா , இலங்கையின் சுதந்திரம் தொடர்பான சிங்கள. வரலாற்று நூல்களை நன்கு வாசிக்கும் போது நீங்கள் செய்த வரலாற்றுத்துரோகங்களை அறியலாம்.
      அவ்வாறே ஆங்கிலேயர்களிடம் மதம் மாறுதல் என்ற அடிப்படையில் குமரன் எல்லாம் அந்தோணியாகி ஆங்கிலமும் கற்று இடைநிலை தொழில்களை பெற்று சிங்கள முஸ்லிம் சமூகங்களை காட்டிக்கொடுத்து மேலும் சலுகைகளை அனுபவித்துவிட்டு புதிய வரலாற்றுப்பாடம் எடுக்க முனைவது தமது இனத்தின் தவறை மறைக்க எடுக்கப்படும் முயற்சியாகும்.
      மேலும ஆரம்பகாலத்தில் வினாப்பத்திரங்களை வேட்டிகளில் அச்சிட்டு பரீட்சைக்கு மாணவர்களை தயாரித்தது போன்று குறுக்குவழிகளில் கல்வியைப்பயன்படுத்திய வரலாறுகளும் இருப்பதாக சிங்களமக்களிடையே பேசப்படுவதையும் அறியாத சிறுவனாகவே உம்மைப்பார்க்கிறேன்.

      Delete
    5. ஆம் நீங்கள் சொல்வது சரிதான் bro

      Delete
    6. Mohemed lafir,
      உமக்கு வரலாறு தெரியாது என்பதை இப்படியா பட்டவர்த்தனமாக ஒப்பு கொள்வீர்.
      இன்றும் பிரதமநீதியரசர்..மத்தியவங்கி ஆளுனர் மேல்மாகாண ஆளுனர் என தமிழரே முக்கிய பதவிகளில் உள்ளனர்.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. Mohemmed lafir
      கண்டி சமஸ்டீ கோரும் பண்டா.

      A thousand and one objections could be raised against the system, but when the objections are dissipated, I am convinced that some form of Federal Government will be the only solution’” – S.W.R.D.Bandaranaike in 1926.

      “We suggest the creation of a federal state as in the United States of America” – Kandyan National Assembly in 1927.

      Delete
    9. Mohamed lafir
      ஒரு வேளை முஸ்லீம்கள் கல்வியில் சிறந்து விளங்கியிருந்தால் இதே சிங்களவர் முஸ்லீம்கள் தொப்பியில் விடைஅச்சிட்டதாக கூறியிருப்பர்.
      😃😝😜

      Delete
    10. Do not dream Federal?

      😄😄😄😄😄😄

      Delete
  2. Replies
    1. @War Lankan, which is correct?

      மத-இனவாதி Lafir எப்போதும் உப்பு-சப்பு இல்லாமல் ஏதும் சொல்லுவார்.

      தமிழ்ர்களுக்கு ஒருவரும் ஒரு சிறு வரப்பிரசாதங்களும் கொடுக்கவும் இல்லை, தேவையும் இல்லை.

      தமிழர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு காரணம் அவர்களின் முயற்சியும் திறமையும் மட்டுமே.

      Delete
    2. Tamils gained so many benefits from English colonialists and later by Sinhalese well.

      That is why they are in good higher positions in jobs.

      Delete
    3. Brother Lafit writes the facts.

      Congratulations!

      Delete
  3. இன்னொன்றை கூற குமாரு மறந்துட்டாரு நோர்வேயின் மத்தியஸ்துடன் இலங்கை அரசு தரவிரும்பிய சமஷ்டி கானாம பேராசைப்பட்டதன் விளைவு இன்று ஒரு சமூகமே அழிபட்டு கிடக்கு

    ReplyDelete
    Replies
    1. நண்பரே.
      நீர் சம்மந்தமில்லாத பதிவை இட்டுருக்கீர்.
      இந்தாலும் எதனை ஏற்க்கவேண்ணடும் எதனை நிராகரிக்க வேண்டுமென்று போராடியவர்கள் தீர்மானிப்பார்கள்.அதைபற்றி நீர் ஏன் அலட்டி கொள்கிறீர்.

      Delete
  4. Tamil mozhi paesubavargal anaivarume tamilargal
    mozhi veru... madham veru...

    ReplyDelete
  5. Tamils bullshit claims of 50:50 paved the way for Tamil terrorism.

    ReplyDelete
  6. The reason why Tamils had better education and better English knowledge at that time was due to the fact that English regime's special treatment towards Tamils in the area of education and employment. They established all their good Missionary schools in North and other major cities where Tamils lived. This may be due to their policy of divide and rule. Whatever the reason is, it cannot be denied that Tamils benefited during British rule.

    ReplyDelete
    Replies
    1. Tamils got success in exams cheating.

      These were many times caught by Sinhalese.

      Delete
  7. Lafir ,

    Singala varalaatril Gouthama Buddha Ilankai
    vandazaaga avargal solgiraargal.Aanaal unmai
    enna ? Buddha varavillai . Izuthaan unmai .
    Adukkik kondu pogalam . Inru sariththiram
    ulagam pooravum thirivupaduththap
    pattirukkirazu enbazai marakka vendam !
    Enave konjam nadunilaiyaip peni nadakka
    muyatchippazu nallazu enbazu enazu karuththu.
    Thamizh sahozarargal engaludan tharkkam
    seyya varumpozu valuvaana tharkkangalai
    munvaippazey ellorukkum nallazu .

    ReplyDelete
  8. Kumar Kumaran
    Kavalaiye vendam , naangalthan engal arivai
    airportil thinam kaattuginromey .Singalavarum
    Thamilarum poatti poattukkondu kuzirai odum
    pozu Muslimgal customsukku dimikki kodukka
    katrukkondaargal . Otrumaiyaaga thaaney ellamey,
    pinnar enna , naanillai nee enginra poatti
    thalaiva ?

    ReplyDelete

Powered by Blogger.