Header Ads



50 குற்றச்சாட்டு உள்ள ஞானசாராவை பிடித்தால், எப்படி இரத்த ஆறு ஓடும்? டிலந்தவை உடன் கைதுசெய்

பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசாரதேரரைக் கைதுசெய்தால் நாட்டில்  இரத்த ஆறு ஓடும் எனவும் நாட்டிலே பாரிய குழப்பங்கள் உருவாகுமென்றும் அடிக்கடி கூறி வரும் அவ்வியக்கத்தின் தலைவர் டிலந்த விதானகேயை பொலிஸார் உடன் கைதுசெய்து, சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.  

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில பொலிஸில்; முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டுவரும் ஒருவரை கைதுசெய்ய வேண்டாம் என டிலந்த பிரச்சாரங்களை மேற்கொள்வது சட்டத்தையும், நீதியையும் கேலிக்கூத்தாக அவர் நினைப்பதையே நிருபிக்கின்றது.  

யாரையும் கைதுசெய்ய வேண்டாமென்று பொலிஸாரையும் நீதிமன்றத்தையும் எந்தவொரு பிரஜையும் பலவந்தப்படுத்த முடியாது. சட்டம் தனது கடமையை உரிய முறையில் மேற்கொள்வதற்கு எந்தவொரு பிரஜையும் இடைஞ்சலாக, அதற்கு குறுக்கீடாக செயற்பட்டாலும் அவருக்கெதிராக முதலில் நடவடிக்கை எடுப்பதன் மூலமே சட்ட ஆட்சியை வலுப்படுத்த முடியும். மாறாக குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் கருத்துச் சொல்வது, கோரிக்கை விடுப்பது, பலவந்தப்படுத்துவது சட்டத்துக்கு முரணான செயலாகும். 

ஒரு நாட்டிலே சட்டம் ஒழுங்கு இல்லையென்றால் அது காட்டரசாங்கமாகவே மாறவேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படும். 

ஞானசாரதேரர் ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் இருந்தவர். அளுத்கம இனக் கலவரம் தொடர்பில் அவருக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இருக்கின்றன. சிறையில் இருந்த ஒருவரை மீண்டும் இன்னுமொரு குற்றச் செயலுக்காக கைதுசெய்தால் நாட்டிலே எவ்வாறு இரத்த ஆறு ஓட முடியும்? ஞானசாரரை பாதுகாப்பதற்காக ஒரு கூட்டம் வெறுமனே ஒரு மாயையை ஏற்படுத்தி பீதி ஒன்றை உருவாக்க நினைக்கின்றனர். சட்டத்தின் முன் எல்லோரும் சமனே. வேண்டுமெனில் ஞானசாரர் தவறு இழைக்காமல் தண்டிக்கப்பட்டால் அல்லது கைதுசெய்யப்பட்டால் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று அடிப்படை மனித உரிமை வழக்கு தாக்கல் செய்து, நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும். இதனை விடுத்து வீதிகளில் தமது சண்டித்தனத்தை காட்டிக்கொண்டிருக்க கூடாது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாமல் ஒளிந்து இருக்கும் அவரை கைதுசெய்தால் இரத்த ஆறு ஓடுமென கூறிவரும் விதானகே, ஏதோ ஒரு உள்நோக்கத்திலேயே இவ்வாறு கதைக்கின்றார்.  இரத்தக் களரி ஒன்றை உருவாக்கி நாட்டில் ஏதோ ஒரு குழப்பத்தை ஏற்படுத்த இந்த இயக்கம் முஸ்தீபுகளை செய்து வருவதன் பிரதிபலிப்பாகவே இதனைக் கருத வேண்டியிருக்கின்றது. எனவே தயவுதாட்சணையின்றி டிலந்த விதானகேயும், அவருடன் சார்ந்தவர்களும் கைதுசெய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். 

6 comments:

  1. சொல்லபட்ட கருத்து என்னவோ 100% உண்மை தான்.

    ஆனால் சொல்லுர ஆளை பாரு. யார் என்ன சொல்லுவது என ஒரு விபஸ்தை இல்லஈமல் போய்விட்டது.

    மன்னார் நீதிபதிக்கும் கத்தோலிக்க மதகுருவுக்கும் கொலைமிரட்டல் விடுத்த குற்றத்திற்கு காக ஜெயிலுக்கு போக வேண்டியவர் இந்த பதியுதீன். பின்னர் மகிந்தவின் கையை காலை பிடித்து நீதியின் பிடியிலிருந்து தப்பிவிட்டார்.

    இப்படியானவர் நீதித்துறையை பற்றி கருத்து சொன்னால் எப்படி?

    ReplyDelete
  2. எல்லாமே அரசியலாகி
    இன்று ஞானமே பெரிய வாக்கு வங்கியை வைத்திருக்கும் ஒருவராக உள்ளார். அவர் ஐ.தே க்கும் தேவை, மயிந்ணருக்கும் தேவை, நல்லாட்சி மன்னவரு my3 க்கும் தேவை. அவனே இந்த நாட்டில் ஆட்சியை ஏற்படுத்தும் வல்லவன்.

    ReplyDelete
    Replies
    1. என்ன பெரிய வாக்கு வங்கி உண்டு. கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்தானே!மிஞ்சி மிஞ்சிப் போனால் 5000 வாக்குகளை வைத்துருகப்பார். அதற்காக குற்றவாளியை தப்பிக்க விட முடியாது. றிஷாட் பதியுதின் அவர்களால்தான் ஞான சாரரை அடக்க முடியும்.

      Delete
  3. "THE MUSLIM VOICE" STATES AGAIN AND AGAIN THAT IF MINISTER RISHAD BATHIUDEEN HAS THE REAL FEELING TO HELP THE MUSLIMS FROM THE ATTACKS OF THE BBS, GANASAARA THERO AND THE YAHAPALANA NATIONALIST BUDDHIST MINISTERS LIKE CHAMPIKA RANAWAKA AND WIJEYDASA RAJAPAKSA, THE PM AND PRESIDENT MAITHRIPALA SIRISENA, MINISTER RISHAD BATHIUDEEN SHOULD RESIGN FROM THE POST OF MINISTER AND OTHER OFFICIAL POSITIONS IN THE GOVERNMENT AND SIT IN THE OPPOSITION AS A PROTEST.
    Muslim politicians, Muslim Civil Society groups, MCSL, Shroora Council, ACJU, Muslim Media Forum who supported the "Hansaya" and the "Yahapalana group" for their personal gains and benefits and not the community should take full responsibility of this situation. You all are now answerable (Insha Allah) to God AllMighty Allah and the Muslim voters/community at large for putting us in this plight. YOU WERE PART OF THEM. You cannot run away from this anymore. Islamic religious scholars say: "Betrayal is the worst form of hypocrisy", "Betrayal is the worst sin," and "Betrayal is an indication on the lack of piety and religiousness".
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  4. Exactly you asked! BBS leader thilantha is the big terrorist... as he warns and trial the justice..

    ReplyDelete

Powered by Blogger.