Header Ads



ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் சடலங்கள் மீட்பு

மாத்தறையில் இரண்டு பெண் சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மாத்தறை – கம்புருபிட்டிய – பெரளிஹதுர பகுதியில் தந்தை, இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உட்பட நால்வரின் சடலங்கள் மீட்பப்பட்டுள்ளன.

44 வயது தந்தையும், அவரது 10 மற்றும் 16 வயது பெண் பிள்ளைகளும், 14 வயது ஆண் பிள்ளையுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலங்களாக மீட்கப்பட்ட சிறார்களின் தாய் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னரே வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குடும்பத் தகராறொன்றின் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.