Header Ads



பாணந்துறை பள்ளிவாசல் தாக்குதல், மாணவன் கைது, 3 பேர் தேடப்படுகிறார்கள்

பாணந்துறை நகரிலும் எலுவில பகுதியிலும் இரு பள்ளிவாசல்கள் மற்றும் இரு கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய  கும்பலின் உறுப்பினர்கள் நாலவரை தேடி வரும்  கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் பல்கலைக் கழக மாணவன் ஒருவனை கைது செய்துள்ளனர்.  

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பில் கடந்தவாரம் பொது பல சேனா அமைப்புடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்த தேரர் ஒருவர், கொழும்பு வாழைத் தோட்டம் பொலிஸ் நிலைய பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட நாலவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது பல்கலைக் கழக மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சொய்ஸா தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்துள்ள இந்த விசாரணைகளில் மேலும் மூவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடிகிவிடப்பட்டுள்ளன. 

இவ்வாறு தேடப்படுபவர்களில் தேரர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

(எம்.எப்.எம்.பஸீர்)

1 comment:

  1. இது போல் பல நாடகங்கள் .தொடரும்

    ReplyDelete

Powered by Blogger.