ஞானசாரருக்கு ஒன்றல்ல, 2 பிடியாணைகள் - சிராஸ் நூர்தீனின் வாதமும்..!
MFM.Fazeer
அல்குர்ஆனை அவமதித்து கருத்து வெளியிட்டமை, ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பினுள் அத்துமீறி கலகம் விளைவித்தமை தொடர்பில் கோட்டை நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கில் ஆஜராகாத பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கோட்டை நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
770/14, 758/14 ஆகிய வழக்கெண்களைக் கொண்ட இரு வழக்குகள் தொடர்பிலேயே கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி ஞானசார தேரரைக் கைது செய்ய இரு வழக்குகள் தொடர்பிலும் தலா ஒவ்வொரு பிடியாணை வீதம் இரு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
2014.04.09 ஆம் திகதி கொம்பனி வீதி நிப்பொன் ஹோட்டலில் நடைபெற்ற ஜாதிக பலசேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பினுள் அத்துமீறி, அதனை குழப்பியமை, திட்டமிட்ட அத்து மீறல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுகள் ஞானசார தேரருக்கும் மேலும் 6 சந்தேக நபர்களுக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ளது.
இதனை விட 2014.04.12 அன்று கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் இஸ்லாத்தையும் குர் ஆனையும் அவமதிக்கும் விதமாகவும் நிந்திக்கும் விதமாகவும் கருத்துகளை வெளியிட்டமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக மட்டும் பிறிதொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்விரு வழக்குகளும் நேற்று மீள விசாரணைக்கு வந்தன. இதன்போது குர்ஆனை அவமதித்தமை மற்றும் நிப்பொன் ஹோட்டால் விவகாரங்களில் சந்தேக நபரான தற்போது பிணையில் உள்ள ஞானசார தேரர் மன்றில் ஆஜராகவில்லை. அவருடன் நிப்பொன் ஹோட்டல் விவகாரத்தில் சந்தேக நபரான ஆரியவங்ஷ சமித்தகம தேரரும் மன்றில் ஆஜராகவில்லை.
வழக்கானது விசாரணைக்கு வந்த போது விசரணையாளர்கள் சார்பில் மன்றில் பிரசன்னமான கொம்பனி வீதி பொலிஸார், இந்த இரு விவகாரங்களின் விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் கருத்துகள் முன் வைக்கப்பட்டன. குறிப்பாக நேற்று மன்றில் ஆஜராகாத கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் மன்றில் சட்டத்தரணிகள் குழுவொன்றே பிரசன்னமாகியிருந்தது.
ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வரலியத்த தலைமையில் ஒரு குழுவும் சிரேஷ்ட சட்டத்தரணி சுதர்ஷனி குணரத்ன தலைமையில் மற்றொரு குழுவும் இதன்போது ஞானசார தேரர் சார்பில் மன்றில் பிரசன்னமாகினர்.
இதன்போது ஞானசார தேரர் மன்றில் ஆஜராகாமை தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வரலியத்த, 'ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு விசாரணைகளும் இடம்பெறுவதாகவும் தெரிவித்ததுடன் உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே அவரால் மன்றில் பிரசன்னமாக முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்து தெரிவித்த சிரேஷ்ட சட்டத்தரணி சுதர்ஷனி குணரத்ன, ஞானசார தேரரைக் கைது செய்ய பொலிஸ் மா அதிபரே 4 குழுக்களை நியமித்துள்ள நிலையில் அவரால் வெளியில் நடமாட முடியாது என்று அவ்வாறு வந்தால் பொலிஸார் அவரைக் கைது செய்வர் எனவும் தெரிவித்தார்.
இதனை கருத்தில் கொண்ட நீதிவான் லங்க அஜயரத்ன விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் தொடர்ச்சியாக மன்றில் ஆஜராகிவரும் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீனிடம் கருத்துகளை முன்வைக்குமாறு கோரினார்.
இதன்போது மன்றில் கருத்துகளை முன்வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி சிராஷ் நூர்தீன், நாம் யாருக்கும் பிணை வழங்குமாறோ, அல்லது பிணையை ரத்து செய்யுமாறோ, பிடியாணை பிறப்பிக்குமாறோ விஷேடமாக கோரவில்லை. அரசியலமைப்பின் 10 மற்றும் 12 ஆவது உறுப்புரைகளுக்கு அமைய சட்டத்தின் மீதான ஆட்சியையும் நியாயாதிக்கத்தையும் அமுல் செய்யவே கோருகின்றோம் என அவர் நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இந்நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் லங்க அஜயரத்ன ஞானசார தேரருக்கு பிடிவிறாந்து பிறப்பித்ததுடன் இரு வழக்குகள் தொடர்பிலும் அவரை உடன் கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய உத்தரவிட்டார்.
அத்துடன் ஆரியவங்ஷ சமித்தகம தேரரை நிப்போன் ஹோட்டல் ஊடகவியலாளர் சந்திப்பில் கலகம் விளைவித்தமை தொடர்பில் மன்றில் ஆஜராகாததால் கைது செய்யுமாறும் நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இரு வரிகளால் சார வெறிநாயை கூட்டில் அடைக்க சட்டத் தரணி ஷிராசினால் முடியும் என்றால், 04 விஷேட போலீஸ் குழுக்களால் முடியாமல் போனது ஏன் ? இனவாதத்தை மிஞ்சிய விவேகம் கொண்ட சட்டத் தரணி ஷிராசை வாழ்த்துவோம், பிரார்த்திப்போம்.
ReplyDeleteThank you brother Ziraz Nooriddin
ReplyDelete