Header Ads



2 பள்­ளி­வா­சல்களை தாக்கிய பொலிஸ் கான்ஸ்­ட­பிளும், தேரரும் கைது

-MFM.Fazeer + விடிவெள்ளி-

பாணந்­துறை நக­ரிலும் எலு­வில பகு­தி­யிலும் இரு பள்­ளி­வா­சல்கள் மற்றும் இரு கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­திய கும்­பலை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிசாந்த சொய்­ஸாவின் கீழ் செயற்­பட்ட சிறப்புப் பொலிஸ் குழுவே இவர்­களைக் கைது செய்­த­தா­கவும் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் பாணந்­துறை நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டு எதிர்­வரும் 30 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரும் பொலிஸ் மா அதி­பரின் அலு­வ­லக பிர­தா­னி­யு­மான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜயக்­கொடி தெரி­வித்தார். கைதான நால்­வரில் பொது பல சேனா அமைப்­புடன் இணைந்து செயற்­பட்ட பெளத்த தேரர் ஒரு­வரும், கொழும்பு - வாழைத்­தோட்டம் பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒரு­வரும் அடங்­கு­வ­தாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜயக்­கொடி சுட்­டிக்­காட்­டினார்.

' இனங்கள், மதங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்­கத்தை சீர்­கு­லைக்கும் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் நாம் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ளோம். அதன்­படி பதி­வான வெறுப்­பூட்டும் அத்­த­கைய சம்­ப­வங்கள் தொடர்பில் தனித்­த­னி­யான பொலிஸ் குழுக்­களைக் கொண்டு விசா­ர­ணை­களை ஆரம்­பித்தோம். இந் நிலையில் தற்­போது அந்த விசா­ர­ணை­களின் பலன் தெரிய ஆரம்­பித்­துள்­ளது.

 மே மாதம் 17 ஆம் திகதி பாணந்­துறை பகு­தியில் எலு­வில முஸ்லிம் பள்­ளி­வாசல் மீதும் அதற்கு முன்­னைய தினம் பாணந்­துறை நகரில் அமைந்­துள்ள பள்­ளி­வாசல் ஒன்றின் மீதும் பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­தி­யமை, எலு­வில பகு­தியில் இரு முஸ்லிம் கடைகள் மீது தாக்­குதல் நடத்­தி­யமை தொடர்­பி­லேயே நான்கு சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இவர்­களில் ஒரு தேரரும் ஒரு பொலிஸ் கான்ஸ்­ட­பிளும் இரு சிவி­லி­யன்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். அவர்கள் இந்த குற்­றங்­களைப் புரி­வ­தற்­காக பயன்­ப­டுத்­திய கெப் வாகனம் ஒன்று, இரு வாள்கள், ஒரு ஹொக்கி மட்டை மற்றும் பெற்றோல் குண்டு தயா­ரிக்க பயன்­ப­டுத்­தப்­பட்ட உப­க­ர­ணங்கள் ஆகி­ய­னவும் மீட்­கப்­பட்டு நீதி­மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டன. இதன் போதே அவர்­களை 30 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது. 

 இதனை விட கடந்த மே 20 ஆம் திகதி குரு­நாகல், மல்­ல­வ­பிட்டி பகு­தியில் ஜும் ஆ பள்ளி வாசல் மீது நடத்­தப்­பட்ட தாக்­குதல் தொடர்பில் இரு சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டனர். அவர்கள் 19 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவர்­களில் பிர­தான சந்­தேக நப­ருக்கு சொந்­த­மான கடை அறையில் இருந்து இன­வாத போஸ்­டர்கள் பல மீட்­கப்­பட்­டன.

 சந்­தேக நபர்­களில் பலர் பொது­பல சேனாவின் செயற்­பாட்டு உறுப்­பி­னர்­க­ளாவர். உண்­மையில் பாணந்­துறை சம்­ப­வத்தில் கைதான பௌத்த தேரர் பொது­பல சேனாவின் செயற்­பா­டு­க­ளுடன் மிக நெருக்­க­மாகச் செயற்­பட்­டவர். பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் வாழைத்­தோட்டம் பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்­று­பவர். அவர் கடந்த இரு வரு­டங்­க­ளாக பொலிஸ் சேவையில் இருந்து விலகி இருந்­துள்­ள­துடன் அண்­மை­யி­லேயே மீள இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தவர்.

எனவே இன, மத­வாத நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுவோர் தரா­தரம் பார்க்­காது சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­டுவர் என்­பதை கூறு­கின்றோம் என்றார்.

பாணந்­துறை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட எலு­வில பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான இரு வர்த்­தக நிலை­யங்கள் மீதும் பள்­ளி­வாசல் ஒன்றின் மீதும் கடந்த மே 17 ஆம் திகதி பெற்றோல் குண்­டுத்­தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. 

சுமார் நால்வர் கொன்ட குழு­வொன்றே இந்த தாக்­கு­தலை நடத்­தி­யுள்­ளமை ஆரம்­பிக்கப்பட்ட பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­துடன் ஒரு வர்த்­தக நிலையம் மீது தாக்­குதல் நடத்தும் காட்சி அருகில் உள்ள கடை ஒன்றின் சி.சி.ரி.வி. கம­ராவில் பதி­வா­கி­யி­ருந்­தன.  

அதே போல் மே 16 ஆம் திகதி பாணந்­துறை பழைய பஸார் பகு­தியில் உள்ள வர்த்­தக நிலை­யங்­க­ளி­டையே அமைக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சலின் மேல் மாடி பெற்றோல் குண்டுத் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யது.

இப்­பள்­ளி­வா­ச­லுக்கு பின் பக்­க­மாக பாணந்­துறை குப்­பை­மேடு அமைந்­துள்ள நிலையில் அப்­ப­கு­தியை நோக்கி பள்­ளி­வா­சலில் ஜன்னல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜன்னலே உடைக்கப்பட்டு மேல்மாடிக்கு பெற்றோல் நிரப்பப்பட்ட போத்தல்கள் ஊடாக தயாரிக்கப்படும் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தன.

2 comments:

  1. so is this prove not enough to ban BBS as a terrorist organization?

    ReplyDelete
  2. Not enough; until they attack the properties of My3 & Ranil.

    ReplyDelete

Powered by Blogger.