கடந்த மாதம் பள்ளிவாசல் மீது தாக்குதல் - பொதுபல சேனாவின் 2 பேர் கைது
-Dc-
கடந்த மே மாதம் 21ஆம் திகதி குருநாகல், மல்லவபிட்டிய ஜும்ஆப் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் பொதுபல சேனா அமைப்பின் செயற்பாட்டாளர்களா இருப்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேரைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அவர்கள் தற்பொழுது குறித்த பிரதேசத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் 19எதிர்வரும் ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment