Header Ads



ஒரு மாதத்திற்குள் 166 ஆலயங்களை பிக்குமார் தாக்கினார்களா..? மன்னிப்பு கோர விஜயதாசா வலியுறுத்து

சட்டத்தரணி லக்சான் டயஸ் 24 மணி நேரத்திற்குள் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒரு மாத காலத்திற்குள் 166 கிறிஸ்தவ ஆலயங்களை பிக்குமார் தாக்கியதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சட்டத்தரணி லக்சான் டயஸ் கூறியிருந்தார்.

இது குறித்து பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கேட்டபோது அப்படியான தாக்குதல்கள் நடைபெறவில்லை என கூறியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், பொய்யான தகவலை கூறியமைக்காக சட்டத்தரணி மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அவர் அதனை செய்யாவிட்டால், சட்டத் தொழிலில் இருந்து அவரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகள் திங்கட் கிழமை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

மாங்குளத்தில் புதிய நீதிமன்ற கட்டிடத்தை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை சீர்குலைக்கும் மற்றும் விரோதத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை கடுமையாக நிராகரிப்பதாகவும் கூறியுள்ளார்.

நாட்டு குடிமக்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும். அத்துடன் அனைவரது உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. Mr vijedasa rajapaksha... first of all you have to arrest and remove uniform of Janasara. He is the one who break the rule every where. Y u leave him and save him too? Than ur preparing to get someone who didint involve in this case . So ur trying to show the public people that ur doing well ... dont think our people are not like before...

    ReplyDelete
  2. நீதி தனது கண்ணை திறந்துவிட்டது?
    இனி செங்கோலாட்சிதான்?
    எங்கும் இனபேத்த்தை இனி காணவே முடியாது.
    வாழ்க உறங்கிய நீதி?

    ReplyDelete
  3. ஒங்கு உம்மா உம்மா
    எங்கு உம்மா சும்மா வா?

    ReplyDelete
  4. Take the advice yourself first.

    ReplyDelete
  5. முஸ்லிம்கள் யாருக்கு வாக்களித்தால் UNP நாய்களுக்கு மட்டும் வாக்களிக்க கூடாது த்ரோகிகள்.

    ReplyDelete
  6. இவனிடமிருந்து நீதி அமைச்சைப் பறிக்க வேண்டும்

    ReplyDelete
  7. 166 ஆலயங்களைத் தாக்கவில்லை, அதைவிடக் கூடுதலாகத் தாக்கியுள்ளார்கள் என்றுதான் விஜயதாஸ சொல்லவருகிறார். ஆகவே பிக்குமார்கள் தாக்கிய ஆலயங்களின் எண்ணிக்கைய நீதியமைச்சரே அறிவார். அது எத்தனை என்பதை நீதியமைச்சர் சொல்லவேண்டும் என சட்டத்தரணி கேட்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.