Header Ads



இன - மத விரோதங்களை ஏற்படுத்திய 14 பேர் கைது, அதிகமானவர்கள் பொதுபல சேனா காரர்கள்

இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைத்து, விரோதங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரியந்த ஜயகொடி இதனை குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுபல சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

4 comments:

  1. வடகிழக்கு யுத்தத்தின் போதும் இயக்கங்களின் தலைவர்களை முதலில் பிடிக்விர்லை அங்கத்தவர்களைத்தான் பிடித்தது அதன் பின் பொறுப்பில் உள்ள தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் இயக்கம் தடை செய்யப்பட்டது அதே போன்று பொதுபல சேனாவையும் பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்து ஞானசாராவுக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் பாய வேண்டும் ,கொலைகள்.நீதிமன்ற அவமதிப்பு தீ வைப்பு.கலவரத்தை உண்டு பண்ணியது.பயங்கரவாத அமைப்பொன்றை அமைத்து வழி நடத்துதல் எல்லாம் பயங்கர வேலைகள் உடனடியாக பிணை இல்லாத வகையில் கைது செய்து கடுமைமாக விசாரனை செய்யப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் .

    ReplyDelete
  2. வளர்ந்த மரம் ஒன்றை வெட்டி அப்புறப்படுத்த வேண்டுமாயின் , அதன் கிளைகளை ஒவ்வொன்றாக வெட்டி, அடிமரத்தையும் வெட்டி எடுத்து வேரோடு பிடிங்கி வீசுவது போன்று, பொதுபலசேனாவின் குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொரு அங்கத்தவரையும் படிப்படியாக கைதுசெய்து இறுதியில் ஞானசாரவையும் சட்டத்தின்பிடிக்குள் கொண்டுவருவதன் மூலமே பலசேனாவை இல்லாதொழிக்க வேண்டும்.
    எனவே படிப்படியாக பொலிஸார் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு அரசு பூரண ஆதரவை வழங்குவது அவசியமாகும்.

    ReplyDelete
  3. two out of the 14 arrested are Muslims.. Well-done, arrest anyone who instigate social disharmony.

    ReplyDelete

Powered by Blogger.