Header Ads



தம்­புள்ளை வைத்­தி­ய­சா­லையில், வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 10 கிலோ கட்டி -

தம்­புள்ளை வைத்­தி­ய­சா­லையில் ஆணொ­ரு­வரின் வயிற்­றி­லி­ருந்து 10 கிலோ­கிராம் நிறை­யு­டைய கட்டி ஒன்று சத்­திர சிகிச்­சையின் மூலம் அகற்­றப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு சத்­தி­ர­சி­கிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட நபர் மெல்­சி­றி­புர பிர­தே­சத்தை சேர்ந்த 62 வய­தான நப­ரொ­ரு­வ­ராவார். இந்­நபர் வயிற்று வலியின் கார­ண­மாக தம்­புள்ளை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­த­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

தம்­புள்ளை வைத்­தி­ய­சா­லையின் சத்­தி­ர­சி­கிச்சை நிபு­ணர்­க­ளான வைத்­தியர் அஜித் அர்த்த நாயக்க, அக­லங்க பெரேரா மற்றும் இந்­திரா குண­வர்­தன ஆகியோர் உள்­ளிட்ட வைத்­தியர் குழு­வினர் நேற்­றைய தினம் இக்­கட்­டியை சத்­தி­ர­சி­கிச்சை மூலம் அகற்­றினர்.

இந்­ந­பரின் வயிற்­றி­லி­ருந்து இந்தப் 10 கிலோ கட்டி அகற்­றப்­பட்­டுள்ள நிலையில் குறித்த நோயாளி தேகாரோக்கியத்துடன் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.