அச்சமடைந்தாரா ஜனாதிபதி..? UNP யுடன் இணக்கப்பாட்டுக்கு விசேட குழு
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள விசேட குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த குழு அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்த்தல் குறித்து பேசப்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை களைவது குறித்து இரண்டு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ஆதரவு கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்ற நிலையிலும், தேர்தலை நடத்திக் காட்டுமாறு மஹிந்த அணி சவால் விடுத்துள்ள நிலையிலும் ஜனாதிபதி மைத்திரியிடமிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வயிற்றை கலக்கிவிட்டது
ReplyDelete