Header Ads



வடமத்திய மாகாண சபையும் ஆடுகிறது - UNP டன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சி

வட மத்திய மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் இணக்கப்பாட்டுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். 

இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மற்றுமொரு அமைச்சுப் பதவி வழங்க வேண்டி ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார். 

வட மத்திய மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்தமையால், பெரும்பான்மை ஆசனம் தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. 

No comments

Powered by Blogger.