UNP கூட்டத்தில் மக்கள் வெள்ளம், எந்நேரத்திலும் தேர்தலுக்கு தயார் என்கிறார் ரணில்
ஐக்கிய தேசியக் கட்சி, எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்நோக்க தயாராக உள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்று வரும் ஐக்கிய தேசியக் கட்சியின்மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில்விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐ.தே.கவின் இன்றைய மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தொகையைபார்க்கும் போதே இந்த நம்பிக்கை பிறந்துள்ளது என பிரதமர் கூறியுள்ளார்.
தமது அரசாங்கத்தின், அபிவிருத்தி திட்டங்களுக்கு ஐ.தே.கவின் ஆதரவாளர்களும் உதவவேண்டும் என பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.
Post a Comment