Header Ads



முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக, சுதந்திரக் கட்சி இன்று கூடுகிறது

முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை எடுப்பதற்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு, இன்று (03) கூடவிருப்பதாக, நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையிலேயே, இந்தக் குழு, கூடவிருக்கின்றது.    கண்டி-கெட்டேம்பேயில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு வருகைதராது, காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின், மே தினக்கூட்டத்தில் பங்கேற்ற, கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் முக்கிய பதவியை வகிப்போருக்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இந்தக் கூட்டத்தின் போது, ஆராயப்படும் என்றும் அந்த தகவல் தெரிவித்தது.    

இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டத்துக்குச் சென்றிருந்த தொகுதி அமைப்பாளராக இருக்கின்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரின், எம்.பி பதவிகளை பறிப்பதற்கான தீர்மானமும் இந்த கூட்டத்தின் போது எடுக்கப்படலாம் என்றும் அந்த தகவல் தெரிவித்தது. 

No comments

Powered by Blogger.