Header Ads



தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மூதூரில் NFGG நடாத்திய நிகழ்வு

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்கள உபசரிக்கும் நிகழ்வொன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) நேற்று (30.04.2017) மூதூரில் நடாத்தியது. மூதூரில் அமைந்துள்ள NFGG  யின் பிராந்திய காரியாலய வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூதூர் பிரதேச NFGG யின் செயற்குழு உறுப்பினர் அஸ்செய்க் சாபி நழீமி தலைமையில் நடை பெற்றது.

இதில் NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் பிரதித் தவிசாளர் சிராஜ் மசூர், NFGG  யின் தலைமைத்துவ சபை உறுப்பினர் Dr.KM. ஷாஹிர் ஆகியோர் கலந்து கொண்டு உரைகளை ஆற்றினர். இநநிகழ்வில் ஏறாவூர் பிராந்திய சபை உறுப்பினராண MLM சுஹைல் ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

வழமையாக மேதின நிகழ்வு நடாத்தப்படுகின்ற முறையிலிருந்து விலகி தொழிலாளர்களை கௌரவித்து உபசரிக்கும் வகையில் தொழிலாளர் நிகழ்வுகளை NFGG நடாத்திவருகிறது. அந்த வகையிலேயே மூதூர் பிரதேச தொழிலாளர் தின நிகழ்வும் நேற்று (30.04.2017) நடாத்தப்பட்டது. மூதூர் பிரதேசத்தில் வசிக்கும் தொழிலாளர்கள் பிரத்தியேகமான அழைப்பின் மூலம் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் மத்தியில் உழைப்பின் பெறுமதி பற்றியும் தொழிலாளர் தினத்தின் வரலாறு , அதன் முக்கியத்துவம் பற்றியும் உரைகள் ஆற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் சிற்றுண்டி உபசாரமும் வழங்கப்பட்டது.


No comments

Powered by Blogger.