''FCID'' மூடப்படும் - சிங்களப் பத்திரிகை செய்தி
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நல்லாட்சி அரசாங்கம் நியமித்த ஊழலைக் கட்டுப்படுத்தும் குழுவின் அலுவலகத்தை மூடிவிட நல்லாட்சி அரசின் ஒரு தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக தற்போது ஊழலைக் கட்டுப்படுத்தும் குழுவின் செயலகத்தின் மூலம் நிதிக் குற்றச்சாட்டுப் பிரிவுக்கு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் ஒரு பகுதி இரகசிய பொலிஸாருக்கும் ஏனைய விசேட விசாரணைப் பிரிவுகளுக்கும் அனுப்பி வைக்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து முறைப்பாடுகளும் நிதிக் குற்றங்கள் தொடர்பானவை என்பதால் அது தொடர்பாக நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளைக் கொண்ட குழுவை நிதிக் குற்றப் பிரிவிலிருந்து அப்புறப்படுத்தி ஏனைய பிரிவுகளுக்கு ஒப்படைப்பது கேள்விக்குறியாகவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment