Header Ads



முஸ்­லிம்கள் இன, மத பேதங்­களைக் கடந்து உத­வி­பு­ரிவோம் - ரிஸ்வி முப்தி

'நாட்டில் ஏற்­பட்ட சீரற்ற கால­நி­லையின் அனர்த்­தத்­தினால் நாம் நூற்­றுக்கும் மேற்­பட்ட உற­வு­களை இழந்து விட்டோம்.இலட்­சக்­க­ணக்­கானோர் அக­தி­க­ளாகி விட்­டார்கள். அதி­க­மானோர் காணாமல் போய்­விட்­டார்கள். பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு முஸ்­லிம்கள் நாம் இன, மத பேதங்­களைக் கடந்து உத­வி­பு­ரிவோம்'.

என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

அண்­மையில் ஏற்­பட்ட கால­நிலை அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்கள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் 

‘அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை மஸ்­ஜி­து­களின் உத­வி­யுடன் நிவா­ரண உத­விகள் மற்றும் உத­வி­களை வழங்­கு­வ­தற்கு ஏற்­பா­டு­களைச் செய்­துள்­ளது. இதே­வேளை பாதிக்­கப்­பட்­டுள்ள பிர­தே­சங்­க­ளுக்கு அரு­கி­லுள்ள மக்­களும் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு உத­வி­களை வழங்க வேண்டும்.

நபிகள் நாய­கத்தின் காலத்தில் மஸ்­ஜி­து­களை மையப்­ப­டுத்­தியே அனர்த்­தங்­களின் போது நிவா­ரண நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அன்று மஸ்­ஜி­து­களில் குறிப்­பி­டக்­கூ­டிய நான்கு அம்­சங்கள் மைய­மாகக் கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. இவற்றில் சமூ­க­சே­வையும் ஒன்­றாகும். மஸ்­ஜி­துகள் தாஈக்­களை உரு­வாக்­கின. மேலும் மார்க்க அறிவு போதிக்­கப்­பட்­டது. ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­துக்கும் தேவை­யான அறிவு வழங்­கப்­பட்­டது. மற்றும் இபாதத் போதிக்­கப்­பட்­டது.

உலமா சபையும் மஸ்­ஜி­து­களை மைய­மாகக் கொண்டே தற்­போது சமூக சேவை­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது. மஸ்­ஜி­துகள் நல்­லி­ணக்க நிலை­யங்­க­ளா­கவும் கல்வி நிலை­யங்­க­ளா­கவும் மாறி­வ­ரு­கின்­றன.

திடீ­ரென ஏற்­படும் அனர்த்­தங்­களின் போது உதவி செய்யும் மனப்­பான்மை நபிகள் நாயகம் (ஸல்) அவர்­க­ளி­ட­மி­ருந்­தது. நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்­களின் வாழ்க்­கையைப்­ பின்­பற்ற வேண்டும். அவர் ஏழை­க­ளுக்கும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கும் உத­வி­களைச் செய்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மஸ்ஜிதுல் நபவி எப்படி இருந்ததோ மஸ்ஜிதுல் நபவியில் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டனவோ அவை எமது பள்ளிவாசல்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.



-ARA.Fareel-

1 comment:

Powered by Blogger.