Header Ads



முஸ்­லிம்­களைப் பிரித்­தெ­டுக்­க சூழ்ச்­சி, ­அர­சாங்கம் மௌன­மாக இருக்­காது - ஹலீம்

மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வாசல் தாக்­கு­தல்கள் முஸ்­லிம்­களை அர­சாங்­கத்தின் மீது  வெறுப்­ப­டையச் செய்­வ­தற்­கான சூழ்ச்­சி­யாகும். பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்­க­ளையும் , முஸ்­லிம்­களின் காணிகள் மீது அத்­து­மீறி மேற்­கொள்­ளப்­படும் அடா­வ­டித்­த­னங்­க­ளையும்  அர­சாங்கம் பார்த்துக் கொண்டு மௌன­மாக  இருக்­காது என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கா­ரங்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார். 

 கொஹி­ல­வத்தை மற்றும் பாணந்­து­றையில் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டமை, செல்­வ­ந­கரில் முஸ்­லிம்­களின் காணி­களை அப­க­ரிக்க முயல்­கின்­றமை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அமைச்சர் ஹலீம்  இவ்­வாறு கூறினார்.  அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில் 

முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள், வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்கள் அர­சியல் சூழ்ச்­சி­யா­கவே நம்­பப்­ப­டு­கி­றது. இவை அர­சாங்­கத்தின் மீது  நம்­பிக்கை வைத்­தி­ருக்கும் முஸ்­லிம்­களைப் பிரித்­தெ­டுப்­ப­தற்­கான சூழ்ச்­சி­யாகும். இந்தச்  சூழ்ச்­சியை முறி­ய­டிப்­ப­தற்கு  மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளன. 

முஸ்லிம் அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அர­சியல் வேறு­பா­டு­களை மறந்து ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தற்குத் தீர்­மா­னித்­தி­ருக்­கி­றார்கள். 

சமூக வலைத்­த­ளங்­களில் அண்­மைக்­கா­ல­மாக  முஸ்­லிம்­களைப் பற்றி தவ­றான செய்­திகள்  வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன. மீண்டும் ஓர் இனக்­க­ல­வ­ரத்தை உரு­வாக்கும் முயற்­சி­யிலே சமூக வலைத்­த­ளங்கள் ஈடு­பட்­டுள்­ளன. இதனை எதிர்க்கட்­சி­யினர் நிரா­க­ரிப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. இதனை அவர்கள் ஆத­ரிக்­கின்­றனர். 

முஸ்­லிம்­களை அர­சாங்­கத்­தி­லி­ருந்தும் பிரித்­தெ­டுத்து புதிய அர­சியல் கலா­சா­ர­மொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்­கான சூழ்ச்­சியே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது. இதனை முறி­ய­டிக்க அர­சாங்கம் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்கும். 

பள்­ளி­வா­சல்கள் மீது மேற்­கொள்­ளப்­படும் தாக்­குதல் சம்­ப­வங்­களின் சூத்­தி­ர­தா­ரிகள், பள்­ளி­வா­சல்­களில் சி.சி.ரி.வி.கமெரா பொருத்தப்படாதிருப்பதால் இனம் காணப்படாதிருக்கிறார்கள்.

எனவே அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் பள்ளிவாசல்களை இனங்கண்டு அவற்றுக்கு  சி.சி.ரி.வி. கமெரா  பொருத்துவது பற்றி  முஸ்லிம் சமய  பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆலோசித்து வருகிறது.

ARA.Fareel

2 comments:

  1. Shame, Shame, Yahapalanya is counting the days.......

    ReplyDelete
  2. After the end of the countdown to whom are you going to vote?

    ReplyDelete

Powered by Blogger.